ஜால்ரா அடிப்பவனையே உலகம் நம்புகிறது

உங்கள் Sub-ordinate களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

இரண்டு ரகம் இருப்பார்கள். உங்களைத் தொந்தரவு செய்யாமல் தானே முடிவுகளை எடுக்கிறவர்கள் ஒரு ரகம். அடிக்கடி உங்களைக் கலந்தாலோசிக்கிறவர்கள் இன்னொரு ரகம். உங்களைத் தொல்லை பண்ணாமல் தானே Manage செய்கிறவர்களைத்தான் நீங்கள் அதிகம் நேசிக்க வேண்டும்; ஆனால், உங்களைச் சார்ந்து இருக்கிற ஆசாமிகளைத்தான் நீங்கள் அதிகம் நேசிப்பீர்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. தன்னிச்சையாக இருக்கிறவனிடம் சந்தேகமில்லாமல் கொஞ்சம் அகங்காரம் இருக்கும். அந்த அகங்காரம்தான் அவனை உங்களிடமிருந்தோ அல்லது உங்களை அவனிடமிருந்தோ தொலைவில் வைக்கிறது.

நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் பிணைப்பும் இத்தகையதே.

அகங்காரம் முற்றிலுமாய் நீங்குகிற போது நமக்குக் கடவுள் கடாட்சம் முழுசாகக் கிடைக்கிறது. இதைத்தான் சரணாகதி என்பார்கள். அகங்கார நீக்கம் இருவகையாய் நடக்கிறது. நாம் வெறும் கருவிதான் என்பதை அறிவார்த்தமாய் உணர்ந்து இருப்பது ஒரு ரகம். நீதான் பார்த்துக்கணும் என்று பாதங்களில் வீழ்வது ஒரு ரகம்.

முற்றிய அகங்காரம் முற்றிலுமாய் நீங்குவதில்லை.

எப்படி அஸ்வத்தாமாவை அழிக்க முடியவில்லையோ, எப்படி அங்குலிமாலாவை அழிக்க முடியவில்லையோ அது போலவேதான் அகங்காரமும். லேசாய் திசை திருப்பி விட்டால் போதும்.

அகங்காரத்தைக் கூட அழிக்க முடியாது. ஆனால் அதை ‘என்னைக் காட்டிலும் ஈஸ்வரப் பிரேமையில் உசந்தவன் கிடையாது’ எனும் இடத்துக்கு திசை திருப்பி விடலாம். அப்போதும் சரணாகதி உண்டாகும். கடவுளின் அன்புக்குப் பாத்திரம் ஆகலாம்.

நான் மேலே சொன்னது ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னதன் அடிப்படையிலானது. இதைச் சொல்லிவிட்டு நண்பரிடம் ’என்ன புரிந்தது, சொல்லு?’ என்றேன்.

‘எவ்ளோ டேலண்ட் இருந்தாலும் பாஸுக்கு ஜால்ரா அடிச்சாத்தான் பிரமோஷன்’ என்கிறான்.

By K G Jawarlal

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories