December 5, 2025, 9:04 PM
26.6 C
Chennai

உத்தம துதிகள் மூன்று : நவராத்திரி சிறப்புக் கட்டுரை

ஜகன்மாதாவை லலிதாம்பிகை என்ற ரூபத்தில் அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்ரம் பாடி ஆராதித்திருக்கிறார்கள். துர்க்கை, காளி, அன்னபூர்ணேச்வரி, புவநேச்வரி, இன்னும் பல ரூபங்களும் அவளுக்கு உண்டு. லலிதாம்பாள் விஷயமாக மட்டுமே இப்போது சொல்கிறேன்.
ராஜராஜேச்வரி, காமாக்ஷி, காமேச்வரி, த்ரிபுரஸுந்தரி என்ற பெயர்களில் சொல்லப்படும் ஸ்ரீவித்யா தந்த்ர ப்ரதிபாத்யமான [ஸ்ரீவித்யை எனும் வழிபாட்டு நெறிமுறைப்படி ஆராதிக்கப்படும்]தேவதை இந்த லலிதாதான். லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி, லலிதா அஷ்டோத்தரம் என்றெல்லாம் அந்தப் பேரில்தான் ஸ்ரீவித்யையின் அதிதேவதைக்கு நாமாவளிகள் இருப்பதைப் பார்க்கிறோம்.
அவளைப் பற்றிய ஸ்தோத்ர நூல்களில் மூன்று மிகவும் ச்ரேஷ்டமானவை:துர்வாஸர் பண்ணிய ‘ஆர்யா த்விசதி’, மூகர் பண்ணிய ‘பஞ்ச சதி’, ஆசார்யாளுடைய ‘ஸெளந்தர்ய லஹரி’என்று மூன்று. கால க்ரமத்தில் வரிசைப்படுத்தினால் முதலில் துர்வாஸர் பண்ணியது, அப்புறம் ஆசார்யாள் பண்ணியது, கடைசியில் மூகருடையது. மூன்றுக்கும் நடுவாக, நடுநாயகம் என்று சொல்லும்படியாக ‘ஸெளந்தர்ய லஹரி’இருக்கிறது.
அந்த மூன்று ஸ்தோத்ர கர்த்தாக்களும் [சிரித்து]’நம்மவர்’கள்;நமக்கு ரொம்ப ஸொந்தமானவர்கள்! நம்முடைய பீட அதீச்வரியாக இருக்கப்பட்ட காமாக்ஷியிடம் மூன்று பேருக்கும் விசேஷ ஸம்பந்தமுண்டு. துர்வாஸர்தான் [காமாக்ஷிஆலயமாகிய] காமகோஷ்டத்திற்கான பூஜா கல்பத்தைப் பண்ணிக் கொடுத்தவர். அந்தப் பிரகாரந்தான் இன்றைக்கும் அங்கே அம்பாளுக்குப் பூஜை நடக்கிறது. ஆசார்யாளுக்கு காமாக்ஷியிடம், அங்கேயுள்ள காமகோடி பீடத்திடம் உள்ள ஸம்பந்தம் எல்லாருக்கும் தெரிந்தது. மூகர் கவியானதே காமாக்ஷிஅநுக்ரஹத்தில் தான்;அவர் ‘பஞ்சசதி’யில் ஸ்தோத்திரித்திருப்பதும் அவளைத்தான்.
மூன்றில் ‘ஆர்யா த்விசதி’தான் மிகவும் புராதனமானது. த்வி-சதம் என்றால் இருநூறு. ‘ஆர்யா த்விசதி’யில் இருநூறு ச்லோகங்கள் இருப்பதால் அப்படிப் பெயர். ‘ஆர்யா’என்ற அபூர்வமான சந்தஸில் (மீட்டரில்) அது பண்ணப்பட்டிருக்கிறது. அதோடு அது ஸ்தோத்ரிப்பதும் ‘ஆர்யா’என்ற அம்பாள்.
இப்படிச் சொன்னால் அம்பாள் ஆர்யக் கடவுள், திராவிடக் கடவுளில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது!ஆர்யர் என்றால் உயர்வு பொருந்தியவர் என்று அர்த்தமேயழிய, அப்படி ஒரு ரேஸுக்கும் பேரில்லை. வெள்ளைக்காரர்கள் பண்ணிய விபரீதந்தான் ‘ஆர்யன் ரேஸ்’என்று ஆக்கியது. அம்பிகை உயர்ந்ததிலெல்லாம் உயர்ந்தவளாதலால் ஆர்யா. தமிழ்மொழி வழக்கில் ‘ஆர்யை’. பழந்தமிழில் அதை இன்னும் நன்றாகத் தமிழ் பாஷை விதிகளின்படி ரூபம் கொடுத்து ஐயை என்று சொல்லியிருக்கிறது. ஆர்யன்-ஐயன்;ஆர்யை-ஐயை.
ஆர்யா என்று அம்பாளின் பேர். ஆர்யாம்பா என்றே ஆசார்யாளின் தாயாருக்குப் பேர். துர்வாஸர் பண்ணிய இருநூறு ச்லோக ஸ்தோத்ரம் ஆர்ய மீட்டரில் இருப்பதோடு ஆர்யா என்ற அம்பாளைக் குறித்ததாக இருப்பது. அதனால் இருபொருள்பட ‘ஆர்யா த்விசதி’என்று அதற்குப் பெயரிருக்கிறது. அதற்கே இன்னொரு பேர் ‘லலிதா ஸ்தவ ரத்னம்’என்பது. ஸ்தவம் என்றாலும் ஸ்துதிதான். லலிதாம்பாளைப் பற்றிய ஸ்துதிகளுக்குள் ரத்னம் போலிருப்பது ‘லலிதா ஸ்தவ ரத்னம்’.
பட்டாரிகா என்று அம்பிகையைச் சொல்வது வழக்கம். தமிழில் பட்டாரிகை என்று ஆகும். பட்டாரகர் என்றால் பூஜிக்கத் தக்கவர். அதற்குப் பெண்பால் பட்டாரிகா. பட்டாரர், பட்டாரி என்றே சொன்னாலும் போதும். பழைய காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பிடாரி கோவில்களுக்குச் செய்யப்பட்ட ‘என்டோமென்ட்’களை ‘பட்டாரிகா மான்யம்’என்றே சாஸனங்களில் குறித்திருக்கிறது. இதிலிருந்து பட்டாரிதான் பிடாரி ஆகியிருக்கிறதென்று தெரிகிறது.
க்ரோத பட்டாரகரான துர்வாஸர்தான் முதன் முதலில் அம்பாளை ஸ்துதித்த பூலோகவாஸி. அவர் ‘த்விசதி’பாடினதோடு ‘சக்தி மஹிம்ந ஸ்தோத்ரம்’என்றும் அம்பாள் மஹிமை பற்றி ஒரு உத்தமமான ஸ்துதி செய்திருக்கிறார். இவற்றுக்கு அப்புறந்தான் மற்றக் கவிகளின் வாக்குகள் உண்டாயின. அவர் வாக்கிலேயே அம்பிகை ஆவிர்பாவித்திருப்பது ‘த்விசதி’யை அநுபவித்துப் படிப்பவர்களுக்குத் தெரியும்.

ஒரு மையப் புள்ளியைச் சுற்றி அடுக்கடுக்காக நாற்பத்து மூன்று கோணங்கள் கம்பாக – cone shape ல் – எழும்பி அமைந்த ஸ்ரீசக்ரம் என்ற யந்த்ரத்தில், ‘ஆவரண’ங்கள் என்னும் சுற்றுக்களில் (மூல ஸ்தானத்தைச் சுற்றி பஞ்ச ப்ராகாரம், ஸப்த ப்ராகாரம் என்றெல்லாம் இருப்பதுபோல ஸ்ரீசக்ரத்தில் உள்ள சுற்றுகளில்) அநேக தேவதைகள் சூழ்ந்திருக்க, அதன் உச்சியாக உள்ள மையப் புள்ளியான பிந்து ஸ்தானத்தில் காமேச்வரனுடைய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கிற காமேச்வரியான ராஜராஜேச்வரியை அந்த எல்லா முக்கோணங்களையும், ஆவரண தேவதைகளையும் விவரமாகச் சொல்லி துர்வாஸர் ஸ்தோத்திரித்திருக்கிறார். இந்த உத்க்ருஷ்டமான கிரந்தத்தைப் பாராயணம் பண்ணினால் நல்ல அநுக்ரஹம் உண்டாகும்;குறிப்பாக நல்ல வாக்கு, கவித்வ சக்தி உண்டாகும்.
அம்பிகை பண்ணுகிற பெரிய அநுக்ரஹம் அவளை வர்ணித்து வர்ணித்து ஸ்துதிக்கிற ஆனந்தத்தைத் தரும் உயர்ந்த வாக்கு விசேஷம்தான். இந்த வாக்குதானே ஒரு பக்தர் பெற்ற அநுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் அதைப் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்கிறது? அதுதான் வாக் சக்தி அருள்வதன் விசேஷம்.

ஒரு ஊமைக்கு இப்படிப்பட்ட அபார வாக்குச் சக்தியை அவள் அநுக்ரஹம் பண்ணினாள். காஞ்சீபுரத்தில் காமாக்ஷிகோயிலில் இருந்த அவருக்கு [இயற்]பெயர் என்னவென்றே தெரியவில்லை. ‘மூகர்’என்று சொல்கிறோம். ‘மூகர்’என்றால் ஊமை என்று அர்த்தம். அந்த ஊமைக்கு அம்பாளின் அநுக்ரஹம் கிடைத்ததுதான் தாமதம், த்வி-சதி இல்லை, பஞ்ச-சதியாகவே ஐநூறு ச்லோகங்களை வர்ஷித்துவிட்டார்!துர்வாஸர் பண்ணினது ‘ஆர்யா த்விசதி’என்றால், மூகர் பண்ணின ‘பஞ்ச-சதி’யில் முதலாவதாக ‘ஆர்யா சதகம்’என்ற நூறு ச்லோகங்கள் இருக்கின்றன. இதுவும், ஆர்யா வ்ருத்தத்தில் [மீட்டரில்]தான் அமைந்தது. அடுத்ததாக அவளுடைய திருவடிகளின் அழகை மட்டுமே நூறு ச்லோகங்களில் சொல்கிற ‘பாதார விந்த சதகம்’, மூன்றாவதாக அவளுடைய பலவித மஹிமைகளைத் துதிக்கும் ‘ஸ்துதி சதகம்’, அதற்கப்புறம் அம்பாளின்கடாக்ஷவீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் ‘கடாக்ஷசதகம்’என்று நூறு ச்லோகங்கள், கடைசியில் அவளுடைய மந்தஹாஸத்தைப் பற்றியே ‘மந்தஸ்மித சதகம்’என்று நூறு – இப்படிப் ‘பஞ்ச சதி’யை மூகர் பண்ணியிருக்கிறார்.
‘ஆர்யா த்விசதி’யும் ‘மூக பஞ்சதி’யும் ஒரு நல்ல சைத்ரிகன் அம்பிகையின் ஸ்வரூபத்தை எழுதிகாட்டுகிற மாதிரி அவளை மனகண்ணுக்கு முன் தோன்றும்படிச் செய்கின்றன. கண்ணுக்கும் மனஸுக்கும் எட்டாதவளைக் கிட்டத்தில் காட்டிக் கொடுக்கின்றன.

மூன்றாவதான ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ பிந்தியோ இவ்வளவு பூர்ணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதுமில்லை, தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை தரம் சொன்னாலும் கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக, தெவிட்டாத மாதூர்யமுள்ளதாக இருப்பது ‘ஸெளந்தர்ய லஹரி’. மூக பஞ்சசதியிலும் மாதுர்யம் இருக்கிறதென்றாலும், அதைவிட இதில் காம்பீர்யமும் சேர்ந்திருக்கிறது!மார்த்வத்துக்கு (மிருதுத்தன்மைக்கு) ‘பஞ்சசதி’, காம்பீர்யத்துக்கு ‘ஸெளந்தர்ய லஹரி’என்றுகூடச் சொல்வதுண்டு. அதனால் இதிலே மார்தவம் குறைச்சல் என்று அர்த்தமில்லை. ஆனாலும் ரொம்பவும் எளிய பதப்பிரயோகம் என்று சொல்லமுடியாது.

ஆசார்யாளின் ஸ்தோத்ரங்களுக்குள் மிகவும் எளிமையானது ‘பஜ கோவிந்தம்’. இது அப்படியில்லை. கொஞ்சம் கஷ்டமான வார்த்தைகள் இருக்கத்தான் செய்யும். நுட்பமாக அநேக விஷயங்களை வர்ணிக்கும்போது precise -ஆக [அதை மட்டுமே குறிப்பாகச் சுட்டுவதாக]உள்ள வார்த்தையைப் போடவேண்டும் என்பதால் கஷ்டமான வார்த்தைகளையும் கொஞ்சம் போட்டிருக்கிறார். புரியாததால் கஷ்டம் என்றாலும், வாய்க்கு மதுரமாகத்தானிருக்கும். புரிந்தவிட்டபின் ‘இந்த வார்த்தையைத்தான் இங்கே போட முடியும்’ என்று கவிதை நயத்தைக் கொண்டாடுவோம். ஆத்மிகத்துக்கு அரிச்சுவடி போல தர்மங்களை, தத்வங்களை ‘பஜ கோவிந்த’த்தில் எளிதாகச் சொல்லிக் கொண்டு போகிறபோது வர்ணனை, உவமை மற்ற அலங்காரங்கள் அவ்வளவாக இல்லாமல் ஸிம்பிள் மீட்டரில், வார்த்தையில் பண்ணினார். இங்கே அம்பாளின் ரூப லாவண்யத்தைச் சொல்ல வந்தபோது, கவிதா ப்ரதிபையில் எப்படியெல்லாம் ஜோடனை செய்ய முடியுமோ அப்படிச் செய்யும்போது ‘ஸ்டைல்’மாறிற்று;மீட்டரும் மாறிற்று. வரிக்குப் பதினேழு எழுத்துக் கொண்ட நாலு வரி ச்லோகங்களாக ‘சிகரிணி’என்ற மீட்டரில் ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பண்ணியிருக்கிறார். அம்பாளின் அழகை வாயாரச் சொல்லிக்கொண்டு ஆனந்தப்படுவதற்கு ஏற்ற விதத்தில் ‘சிகரிணி’சந்தஸை சிகரமாக்கிக் கையாண்டிருக்கிறார்.
நாற்பத்திரண்டாவது ச்லோகத்திலிந்து ஆரம்பித்து நூறு முடியப் பண்ணியிருக்கிற ஸ்வரூப வர்ணனையில், அம்பாளே நம் நேரே தரிசனம் கொடுத்தால் எந்த மாதிரி ஆனந்தமாயிருக்குமோ அந்த மாதிரி ஆனந்தப்படும்படியாக வார்த்தைகளையும், வர்ணனைகளையும் ரஸபாவங்களையும் பொழிந்து அநுக்ரஹித்திருக்கிறார்.
ஒரு பெரிய சில்பி அர்ப்பண புத்தியோடு ஒரு தெய்வச் சில்பத்தைப் பண்ணுகிறபோது அதிலே எப்படி அந்த தெய்வமே வந்து குடிகொண்டு விடுகிறதோ, அப்படி உயர்ந்த நிலையில் அநுபவித்து அநுபவித்து, அந்த அநுபவமும் வாக்கும் அவளே கொடுத்தது என்ற அர்ப்பண புத்தியோடு ஆசார்யாள் இதைப் பண்ணியிருப்பதால் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரிக்கப்படுகிற அம்பாளின் ஸ்வரூபமாக இருக்கிறது.
கொண்டைமாலை கட்டும்போது பூ பூவாக ஸரம் கோத்து, அந்த ஸரங்களை ஒன்றோடொன்று முறுக்கிச் சேர்த்து ஜரிகை, ஜிகினா தைக்கிறதுபோல, அக்ஷரங்களைப் பதமாகத் தொடுத்து, பதங்களை வாக்கியமாகத் தொடுத்து ஒவ்வொரு ச்லோகத்தையும் பண்ணி, ச்லோகத்துக்கு ச்லோகம் ஸம்பந்தப்படுத்தி முழு ஸ்தோத்திரமாகப் பண்ணியுள்ள கலைஞராக, கவியாக ஆசார்யாள் இங்கே தர்சனம் தருகிறார். பூமாலை – பாமாலை என்று சொல்கிறோமல்லவா?பூ மாலை கண்ணுக்கு அழகான ரூபமாகத் தெரிகிறது என்றால், பாமாலை காதுக்கு அழகான சொல்லும் சந்தமுமான ரூபத்தில் இருக்கிறது. பூமாலைக்கு வாஸனை மாதிரிப் பாமாலைக்கு அதன் அர்த்தம். பூவிலிருந்து தேன் வருகிறதென்றால் பாவிலிருந்து கிடைக்கிற ரஸாநுபவம்தான் மனஸுக்குத் தேன். ஒரு பெரிய வித்யாஸம் – பூமாலை வாடிப் போவது;பாமாலை லோகமுள்ள அளவும் வாடாது!

– ஏ.பி. ராமன், சிங்கப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories