குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள செம்பருதிவிளையை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ் ராஜப்பன் இவர் கடந்த 10 வருடங்களாக குவைத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்,குவைத்தில் உள்ள தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தார் நாளைடவில் பெரிய பெரிய நற்பணிகளாக மாறியது ,அண்மையில்
குவைத்தில் 11 மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து இந்தியா அனுப்ப பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார் இந்நிலையில்
குவைத் நாட்டின் மனித உரிமைக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், புலம் பெயர்ந்த மக்களுக்கு இந்தி பேசுபவர்களுக்கும், ஆங்கிலம் பேசுபவர்களுக்கும் குவைத்தில் உள்ள வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்கு இருக்கும் சட்டத்தை விளக்கவும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அதற்கான அடையாள அட்டையும் வழங்க பட்டுள்ளது,குவைத்நாட்டில் தமிழருக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர் கீழ் காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
00965. 97295435
குவைத் மனித உரிமை அமைப்பில் தமிழர்
Popular Categories



