“தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா”

“தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா”.

(மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம், சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம். இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும், அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான்  நம்மோட மகா பாக்கியம்).(‘பில்வம் வைத்தா  உத்தரகிரியை சம்பவம்)  

.நன்றி- குமுதம் லைஃப்தொகுப்பு- ஆர்.ஜி.சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகாபெரியவா ஒரு நாள் தினசரி செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உரிய நேரம் கடந்தும் செய்யாம ஏதோ யோசனையில மூழ்கி இருந்தார். அவரைப்  பார்த்தா மோன நிலையில ஏதோ தியானத்துல ஆழ்ந்து இருக்கறவா மாதிரி தெரிஞ்சுது.
மடத்துல உள்ளவாளுக்கே அதுமாதிரியான சூழல் அபூர்வம்கறதால, அவாளும் மகாபெரியவாளோட அந்த மோனத்தவத்துக்கு காரணம் தெரியாம விழிச்சுண்டு இருந்தா.

கொஞ்ச நேரம் கழிச்சு கண்விழிச்ச மகான், மடத்தோட மேனேஜரைக் கூப்பிட்டார்.ரொம்ப காலத்துக்கு முன்னால மடத்தோட தொடர்புல இருந்த ஒருத்தரோட  முகவரியைத் தேடி எடுத்துண்டு வரச்சொன்னார்.

பலகாலத்துக்கு முன்னால மடத்துக்கு கைங்கரியங்கள் செஞ்சவர் என்பதால், குறிப்புநோட்டுகள் பலதையும் தேடி ஒருவழியா அவரோட விலாசத்தைத் தேடி எடுத்துண்டு வந்தார், மடத்தோட காரியதரிசி.

அந்த விலாசத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட பரமாசார்யா அது சரியான முகவரிதான்கற மாதிரி தலையை அசைத்தார். அப்புறம்,”இந்த விலாசத்துக்கு உடனடியா இவ்வளவு பணத்தை (குறிப்பிட்ட தொகையைச் சொன்னார்) தந்தி மணியார்டர் பண்ணிடு,தாமதிக்காதே,ஒடனே போய் அனுப்பிட்டு வா!” என்று சொன்னார் பரமாசார்யா.

மகாபெரியவா உத்தரவுக்கு மறுப்பு ஏது? உடனே தொகையை எடுத்துண்டு வேகவேகமா போஸ்ட் ஆபீஸுக்குப்போய், குறிப்பிட்ட முகவரிக்கு தந்தி மணியார்டர்ல பணத்தை அனுப்பிட்டு வந்தார்.

நித்ய அனுஷ்டானத்தைக் கூட தள்ளிவைச்சுட்டு பரமாசார்யா அப்படி ஒரு சிந்தனையில ஆழ்ந்து இருந்தது ஏன்? பலகாலம் முன்னால கைங்கரியம் பண்ணின ஒருத்தரோட முகவரியைத் தேடி எடுக்கச் சொல்லி அந்த விலாசத்துக்கு பணம் அனுப்பச் சொன்னது ஏன்? இதெல்லாம் யாருக்கும் புரியலை!.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு அப்புறம் ஸ்ரீமடத்துக்கு ஒரு கடுதாசி வந்தது.

“ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். போனவாரம் என்னோட தகப்பனார் சிவபதம் அடைஞ்சுட்டார். அவரோட தேகத்துக்கு உரிய உத்தரகிரியைகளைப் பண்ணறதுக்கான செலவுக்கு பணம் இல்லாம ரொம்பவே அல்லாடிண்டு இருந்தேன்.
கடைசி நிமிஷம் வரைக்கும், ‘எனக்கு எது நடந்தாலும் பயப்படாதே.எப்பவும் மகாபெரியவாளையே நினைச்சுண்டு இரு. எல்லாத்துக்கும் வழிகாட்ட அந்த மகான் இருக்கார்!’ அப்படின்னுதான் சொல்லிண்டு இருந்தார்-என் தந்தை.
தந்தையார் தவறிப்போன துக்கத்தைவிட அவருக்கான உத்தரகிரியையைச் செய்யறதுக்கு உரிய பணம்  இல்லையேங்கற துக்கம் எனக்கு அதிகரிச்சுண்டே இருந்த சமயத்துல, ஸ்ரீமடத்துலேர்ந்து பெரியவா உத்தரவுப்படி அனுப்பப்பட்டதா ஒரு தொகை தந்தி மணியார்டர்ல வந்தது.

அந்தப் பணம் இங்கே இருக்கற சாஸ்திரிகள் உத்தரகிரியைப் பண்ணறதுக்குக் கேட்ட தொகை எவ்வளவோ அதுக்கு  ரொம்ப சரியா இருந்தது. மகா பெரியவாளுக்கு  என்னோட சாஷ்டாங்க நமஸ்காரம்!”

அப்படின்னு எழுதி இருந்தது அந்தக் கடிதத்துல. அதைப் படிச்சதும்தான் எல்லாருக்கும் விஷயம் புரிஞ்சுது.

ஆனா, யாருக்குமே புரியாதது என்ன தெரியுமா?

மகாபெரியவா தினமும் செய்யற சந்த்ரமௌளீஸ்வர  பூஜைக்கு பல வருஷங்களுக்கு முன்னால தினமும் வில்வம் பறிச்சுண்டு வந்து தர்ற கைங்கரியத்தைப் பண்ணிண்டு இருந்தவர் அந்தத் தொண்டர் ‘பில்வம் வைத்தா’ன்னே பெரியவா அவரைக் கூப்பிடுவார்.
அதுக்கப்புறம் அவர் குடும்பத்தோட கொல்கத்தாவுக்குப் போய் அங்கேயே தங்கிட்டார்.அவர் இங்கேர்ந்து போறச்சே சொல்லிவிட்டுப் போன முகவரியைத்தான் மடத்துல குறிச்சு வைச்சிருந்தா.

1) பலகாலத்துக்கு முன்னால தொண்டு செஞ்ச அந்த பக்தர் இறுதிக்காலத்தை அடைஞ்சுட்டார்னு கிட்டத்தட்ட ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிற இடத்துலேர்ந்து இங்கே இருக்கிற மகானுக்குத் தெரிஞ்சது எப்படி?

2) அந்தத் தொண்டரோட உத்திரகிரியைக்குத் தேவையான பணம் இல்லாம அவரோட வாரிசு கஷ்டப்படறதை மகாபெரியவா எப்படித் தெரிஞ்சுண்டார்.?

3)இதையெல்லாம் விடப் பேரதிசயம், அங்கே சாஸ்திரிகள் கேட்ட தொகைக்கு கொஞ்சமும் கூடவோ, குறைச்சோ இல்லாம சரியான தொகையை அனுப்பச் சொன்னது எப்படி?

மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம்,சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம்.இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும்,அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான் நம்மோட மகா பாக்கியம் 

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories