மகரஜோதி தரிசனத்துக்காக… பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணப் பெட்டி!

Published:

pandalam abaranapetti - 2026

சபரிமலையில் மகரவிளக்கு நாளில் மகர ஜோதி தரிசனத்துக்காக, ஐயப்பனுக்கு அணிவிக்கப் படும் திருவாபரணங்கள் கொண்டபெட்டி, நேற்று மாலை பந்தளத்தில் இருந்து புறப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்து, ஐயப்பனின் திருவாபரணப் பெட்டியை பக்தியுடன் வணங்கினர்.

மகர மாதம் பிறக்கும் நாளை மாலை 6:30க்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

பந்தள ராஜ குமாரனாக அவதரித்து மகிஷியைக் கொன்று மக்களைக் காத்தவர் சுவாமி ஐயப்பன். அவர், பந்தளம் அரண்மனையில் வளர்ந்த காலத்தில் திருவாபரணங்கள் சூடிக்கொண்டு, ராஜ குமாரனாக இருந்தவர். அவர் சபரிமலையில் சென்று யோக ரூபியாய் கோயில் கொண்ட பின்னர், பந்தள மகாராஜா சுவாமி ஐயப்பனைக் காண்பதற்கு அவரது திருவாபரணங்களுடன் சபரிமலை செல்வதாக ஐதீகம். இந்த புராண நிகழ்வின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், பந்தளம் அரண்மனையில் இருந்து ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப் படும்.

pandalam abaranapetti1 - 2026

இதன்படி, நேற்று பகல் 1 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திரு ஆபரணப் பெட்டி, உலா புறப்பட்டது. இது, நாளை மாலை 6 மணிக்கு சபரிமலை சந்நிதானம் சென்று சேரும்.

சபரிமலையில் தற்போது இந்த வருடத்துக்கான மகரவிளக்கு பூஜைக் காலம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலை மகர ஜோதி தரிசனம் பொன்னம்பல மேட்டில் நடைபெறும். அப்போது, சுவாமி ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப் படும் ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img