இந்த இந்த சுலோகத்த படிச்சீங்கன்னா… இதெல்லாம் கைகூடும்! வெற்றி கிடைக்குமாம்!

Published:

appur perumal - 2026

எந்தெந்த பணி வெற்றி பெற வேண்டுமானால் எந்தெந்த ஸ்லோகம் படிக்க வேண்டும்?

விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் தோத்திரங்களை தினமும் படிப்பதால் குடும்ப அங்கத்தினர்களிடையே இருக்கும் வேறுபாடுகள், மனஸ்தாபங்கள், சண்டைகள் நீங்கிவிடும். அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருப்பர்.

விஷ்ணு சகஸ்ரநாமம் தினமும் படிப்பதால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் தலை எடுக்காது. அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.

கனகதாரா ஸ்தோத்திரம் தினமும் படித்தால் நடத்தும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதோடு புதிதாக தொடங்கிய தொழிலில் வெற்றி கிடைக்கும் .

சூரிய அஷ்டகம், ஆதித்ய ஹ்ருதயம் தினமும் படித்தால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலையற்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து பலன் கூடிவரும் .

slokas - 2026

லக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி தினமும் பாராயணம் செய்தால் பிள்ளைகளுக்கு நற்குணம் மிக்கவர் களோடு திருமணம் கைகூடும். திருமண வேலைகள் கூட தடங்கலின்றி நன்கு நிறைவேறும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

நவக்கிரக ஸ்தோத்திரம் தினமும் படிப்பதால் கடன் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் . அதோடு செல்வம் தொடர்பான எந்த தொந்தரவும் தலை எடுக்காது.

ஹயக்ரீவ ஸ்தோத்திரம், சரஸ்வதி துவாதச நாமம் தினமும் படிப்பதால் மாணவர்களுக்கு நல்ல கல்வி அறிவோடு படிப்பிலே கவனம் வளரும்.

கோபால ஸ்தோத்திரம் தினமும் படிப்பதால் சந்தானம் இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை உண்டாகும். அதோடு கர்ப்பிணிகள் இதனை தினமும் படிப்பதால் சுகப்பிரசவம் ஏற்படும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img