பக்தருக்கென இறைவன் செய்யும் லீலை! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

ஒரு சமயம் விடாமல் பெய்த அடை மழையால் வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அதனால் அதன் கரைகளில் கட்டப்பட்டிருந்த அணைகளில் பெரும் பிளவு உண்டாயிற்று.

ஆற்று நீர் ஊருக்குள் புகுந்தது தடுத்து நிறுத்த முடிவு செய்த அந்நாட்டு அரசன் எல்லா பொது மக்களையும் அழைத்து பிளவு ஏற்பட்ட பகுதியை மணலைக் கொண்டு அடைக்குமாறு கட்டளையிட்டான் அரசன்.

அளவில் சிறு சிறு பகுதிகளாக பிரித்து அவற்றை இயக்கும் பொறுப்பை ஊர் மக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான் அவ்வூர் மக்களுள் வயதான ஏழை பெண்மணி இருந்தாள் அவள் பிட்டு எனும் ஒருவகை தின்பண்டத்தை தயாரித்து விற்று ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள்.

பலவீனமாக இருந்தததால் கடினமான காரியங்களை செய்ய முடியவில்லை அரச கட்டளையை எவ்வாறு நிறைவேற்றுவது என கவலைப்பட்டாள்

சிவபெருமான் ஒரு லீலை புரிய நினைத்தார் ஒரு கூலிக்காரனை போல வேடமணிந்து முதாட்டியிடம் சென்றார் அனைவரும் சென்று நதிக்கரையில் கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் இங்கு படுத்துக் கொண்டிருக்கிறாயே

அரசன் கொடுத்த வேலையை செய்வதற்கு உனக்கு இஷ்டம் இல்லையா என்று தெரியாதது போல் கேட்டார் அவள் வருத்தத்துடன் என்ன செய்வது எனக்கு வயதாகிவிட்டதால் அவ்வளவு கடினமான வேலையை என்னால் செய்ய முடியாது மேலும் நான் அந்த வேலையை செய்யப் போனால் பிட்டு வியாபாரம் நின்றுவிடும் நான் பட்டினியாய் இருக்க வேண்டியதுதான். அது அரச கட்டளையை ஏற்கவும் முடியாமல் வேலையும் செய்ய முடியாமல் உள்ளேன் என்னால் எப்படி மீள முடியும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறேன் என்று கூறினாள்

பக்தர்களின் கஷ்டங்களை உடனே தீர்த்து வைக்கும் இறைவன் அவர்களுடைய கஷ்டத்தை கேட்டு கவலைப்படாதே உனக்காக ஒதுக்கப்பட்ட அந்த வேலையை நான் செய்து தருகிறேன் நீ எனக்கு என்ன கைமாறு செய்வாய் என்று கேட்டார் நீ செய்யும் இந்த வேலைக்கு என்னால் என்ன கொடுக்க முடியும் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.

என்னுடைய கஷ்டத்தை பார்த்தாயா என புலம்பினாள் இறைவன் அவளை பார்த்து சரி நான் உனக்காக சென்று அவ்வேலையை செய்கிறேன் நீ எனக்கு என்ன கூலி தருவாய் என கேட்கிறார் அதற்கு அவள் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை நான் என்ன தருவது எனக் கேட்டாள்.

நன்கு வேக விட்டு வைத்திருக்கிறாயே பிட்டு இவற்றை யார் உண்ணப் போகிறார்கள் எனவே நீ எனக்கு அதைக் கொடுத்தால் போதும் அதை கூலியாக ஏற்றுக்கொள்கிறேன் வேறு எதையும் தர வேண்டாம் என்று அங்கிருந்த எல்லா பிட்டுக்களையும் எடுத்து சாப்பிட்டார் மதிய நேரம் முடிந்தது.

இறைவன் வேலை ஏதும் செய்யாமல் வழிப்போக்கர்கள் இடம் வீண் வம்பு பேசிக் கொண்டே காலத்தை போக்கினார் எல்லோரும் தங்களுக்கு இட்ட வேலையை செய்து முடித்தார்கள் ஆனால் அந்த அணையின் ஒரு பகுதியிலிருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டிருந்தது அது அந்த மூதாட்டிக்கு ஒதுக்கப்பட்ட பகுதி செய்தி அரசின் காதுகளுக்கு எட்டியது.

அரசன் அங்கு விரைந்து வந்தான் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து அந்தக் கூலியைக் கைகாட்டி அவனுடைய சோம்பேறித்தனத்தினால்தான் அப்பகுதி அடைக்கப்படாமல் இருக்கிறது என்று அரசனிடம் முறையிட்டார்கள்.

இதனால் கோபமுற்ற அரசன் ஒரு பிரம்பை எடுத்துக் கூலியின் முதுகிலே அடித்தான் அரசன் கூலியை அடித்த கணமே எல்லோருடைய முதுகிலும் அந்த அடி விழுந்தது தவறு செய்த அந்த கூலியை அடைக்காமல் அரசன் என்னை அடித்துவிட்டார் என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் எண்ணி வியந்தார்கள். அடி அரசனுடைய முதுகிலும் விழுந்தது.

அரசன் தான் கொடுத்த தண்டனையை தானே அனுபவிக்க வேண்டியதாயிற்று. கூலியின் வடிவத்தில் வந்திருப்பவர் சாட்சாத் பரமசிவனே என்று உணர்ந்தான் அரசன்.

எல்லோருடைய உள்ளங்களிலும் இறைவன் வசிக்கிறார் என்னும் கருத்தை நமக்கு தெரிவிக்கிறது இந்த நிகழ்ச்சி இறைவன் உருவமற்றவன் பக்தர்களின் பொருட்டு பல வடிவங்களில் அவரால் எடுத்துக்கொள்ள முடியும்

அவருடைய நிலை மிக வினோதமானது மற்றும் ஆனந்தமானது. இந்நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு ஒரு கவி இறைவா நீ பிட்டு சாப்பிடும் போது எங்கும் நிறைந்துள்ள உன்னுடைய சர்வ வியாபக தன்மையை காட்டாமல் அடிவாங்கும் போது மட்டும் காட்டினாயே என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இறைவன் பக்திக்காக இறங்கி வந்து வேலையும் செய்வான். உலகோருக்கு உணர்த்த பல லீலையும் செய்வான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories