ஆத்மஞானம் அடைவதற்கு வேண்டிய தகுதி: ஆச்சார்யாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar

சொர்க்க பதவியை அடைவதற்காக விஸ்வஜித் என்னும் யாகத்தை வாஜஸ்ரவசர் என்பவர் நிகழ்த்தினார்
அந்த யாகத்தை செய்பவர் தன்னிடமுள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்திட வேண்டும் என்பது நியதி.

அவருக்கு நசிகேதன் என்று ஒரு மகன் இருந்தான் தர்மத்தின் மறு உருவமாய் திகழ்ந்த அவன் தனது தந்தை புரோகிதர்களுக்கு அளிக்கும் மலடி கட்டிய எழுத்துக்களைப் பார்த்து திகைத்துப் போனார்.

தனது தந்தையின் வேள்வியில் ஏற்பட்ட குறையை ஈடுபடுவதற்கு மகன் என்ற முறையில் தான் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று எண்ணினார்.

தன்னையே தானமாக கொடுப்பதற்கு ஒப்புக்கொள்ள முடியும் என்று அவன் முடிவெடுத்தான் தந்தையை அணுகி நீங்கள் என்னை யாருக்கு தானமாக கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டான் அவரோ அவனை சட்டை செய்யவில்லை மூன்றாவது முறையாக இதே கேள்வியைக் கேட்டதும் அவர் கோபமாக தன் மகனைப் பார்த்து உன்னை எமனுக்கு அளிக்கிறேன் என்று கூறினார்.

தந்தை ஒரு பேச்சுக்காக இத்தகைய வார்த்தைகளை கோபத்தில் கூறியிருந்தாலும் அவருக்கு களங்கம் அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தான். அவர் சொற்களை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தான்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அச்சிறுவன் யம லோகத்தை சென்றடைந்தான் அங்கே எமன் இல்லாததால் பொறுமையாகவும் வாசலிலேயே காத்திருந்தான். வெளியில் சென்றிருந்த எமன் திரும்பி வந்ததும் மூன்று நாட்கள் காக்க வைத்த அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக அவனுக்கு மூன்று வரங்களை அளித்தார்.

மூன்றாவது வரமாக இறந்த பிறகு உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் ஒன்றிலிருருந்து வேறுபட்டு என்னவாகிறது. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதாக நசிகேதன் எமனிடம் கேட்டான்.

ஆத்மாவைப் பற்றி அறிவதற்கு முன் அதற்கு வேண்டிய தக்க மன உறுதியுடன் நசிகேதன் இருக்கிறானா என்று அவனை பரிட்சை செய்வதற்காக எமன் அவனை பல விதங்களில் ஆசை காட்டி மயக்கி பார்த்தார்.

அவனை நோக்கி பேசத் தொடங்கினார் நூறு வருடங்கள் வாழக்கூடிய புத்திரர்களையும் விரும்பிய அனைத்தையும், குதிரைகளையும் யானைகளையும் கேளு தருகிறேன் உன் விருப்பம் போல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

இவற்றுக்கு சமமான வேறு ஏதாவது கேட்க ஆசைப் பட்டாலும் கேட்டுக்கொள் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெரிய ராஜ்யத்திற்கு உன்னை அதிபதி ஆக்குகிறேன் எல்லா போகங்களையும் அனுபவிப்பதற்கு ஏற்ற வாறு உன்னைத் தயார் செய்கிறேன்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அடைவதற்கான பொருட்களை விருப்பம்போல் கேட்டுக்கொள்வதோடு இசைக் கருவிகளோடு கூடிய தேவலோகத்து கன்னிகைகள் இங்கு இருக்கிறார்கள் அவர்களை எவராலும் அடைய முடியாது.

நீ விரும்பினால் அவர்களுடைய சேவையை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் உடல் நீங்கிய பின் அதனைடமிருந்து வேறுபட்ட ஆத்மா என்னவாகிறது என்ற கேள்வியைப் பற்றி விசாரிக்காதே என்றார்.

எமன் தன்னால் முடிந்த வரையில் எல்லாவித போகங்களையும் கொடுத்து அச்சிறுவனை மயக்கம் முயற்சித்தாலும் அமைதியான நதியைபோல் அவ்வாறு கேட்டதால் சிறிது மனக்கலக்கம் அடையாமல் உறுதியுடன் நின்றான். எமதர்மராஜனே உங்களால் இதுவரையில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் முடிவில் மறையக் கூடியவை அவை மனிதனுடைய இந்திர சக்தியை வீணாக்கி விடுகின்றன.

விதிவிலக்கின்றி இவை எல்லாமே ஒரு நாள் முடிவடைந்து போவதால் அற்ப ஆயுளைக் கொண்டதுதான். ஆகையால் அவைகள் தங்களது உடைமைகளாகவே இருக்கட்டும் என்று கூறினான்.

தான் கூறிய வரம் தான் தனக்கு வேண்டுமென்று அவன் வற்புறுத்தினான். நசிகேதன் உடைய மன உறுதியையும் வைராக்கியத்தின் கண்டு வியந்தவன் அவனுக்கு ஆத்ம வித்தையை எடுத்துரைத்தார் அதைக்கேட்டு அச்சிறுவன் ஞானியானான். அசைக்க முடியாத வைராக்கியத்தை பெற்றவனே ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதி உள்ளவர் என்பதை கடோபஉபநிஷத்தில் வரும் கதை நன்கு வெளிப்படுத்துகிறது

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.30 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img