December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

பழியால் கை வெட்டுப்பட்ட பக்தர்! பாண்டுரங்கன் அருளால் வளர்ந்த அதிசயம்!

pandu
pandu

மாமிச வியாபாரியான சாருகர் தன் கடையில் எடை கல்லாக ஸ்ரீ விட்டல சாளக்கிராம மூர்த்தியை உபயோகித்து வந்தார்.

ஒரு நாள் இதை கவனித்த ஒரு ஸ்ரீ கிருஷ்ண பக்தர் அவரை ஏம்பா இந்த அடாத செயல் செய்கிறாய் என சாளக்கிராமத்தின் மகிமையையும் க்ருஷ்ண பரமாத்மாவின் புகழையும் எடுத்து கூறி பண்டரி மேன்மையையும் கூற சாருகர் தேசாந்திர யாத்திரை செல்ல முடிவு செய்து பண்டரி யாத்ரை செல்கிறார்.

வழி யெல்லாம் பண்டரி நாதா! பண்டரிநாதா! எனு கூறி அலறுவார். விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார்..கண்ணீர் பெருகுவார்..அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையாது.

சாருகர் பஜனை செய்துகொண்டு நடந்து போகிறார். பகல் முழுதும் நடப்பார். பொழுதுபோன பிறகு ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.

ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார்..
இரவில் வேறு இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார்..

இரவு ஒரு மணி… நகரம் இருள் சூழ்ந்திருந்தது… ஒலியடங்கி இருந்தது…
அந்த வீட்டுப் பெண் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே! தாங்கள் யார்? என்று கேட்டாள்.

அம்மா! வணக்கம், நான் ஒரு யாத்ரீகன், என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன் என்றார்.

அந்த பெண்மணி இவரிடம், என் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட உத்தமரே! தாங்கள் என் இதய ராஜா.. இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்” என அவரை ஆசையுடன் நெருங்குகினாள்..

அம்மா! இந்த உலகம் கடுகளவு….. பாவத்தால் வரும் துன்பம் மலையளவு..
நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன் என்றார் சாருகர்.

தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வது தான் கண்ணியம்; கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம்…என கூறுகிறார்..

அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் எறிந்தாள்.

“என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர்” என்று கூறி அருகில் வந்தாள்.
இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார்..

ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா? பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார்.
நான்கு தெரு கூடும் இடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள்.

அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.
பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் கதவைத் திறந்து வெளியே வந்தேன், என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள்.

ஊர்க்காரர்கள் . .சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவல் துறையினர், அவரைச் சிறையில் அடைத்தார்கள்.

பொழுது விடிந்தபின், அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என நடந்ததை உள்ளபடி சொன்னார்.

குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள்.
சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான்.

சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார்.
பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார்.

அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி, நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்.

எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர்.
சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார்.

கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்.
அப்போது வெட்ட பட்ட கைகள் இரண்டும் விட்டலன் அருளால் முளைத்தது..

”தேவ தேவா! அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே… அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே… இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்யவில்லையே.

அப்பாது விட்டலன் ப்ரசன்னமாகி.. அவரை தேற்றி..பாண்டுரங்கன் கூறினார்: “அன்பனே அழாதே, அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓர் அந்தணர் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

பசுவை வெட்ட வந்த ஒருவன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினாய், புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான்.

நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணர்… பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன.

கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி), பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன். ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை என்று கூறினார்.

பிறகு சாருகர் காலமெல்லாம் பண்டரியிலேயே தங்கி நாம செபம் செய்து இறுதியில் வைகுண்டம் எழுந்தருளினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories