spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நவராத்திரி ஸ்பெஷல்: அறிவோம் ஐம்பது!

நவராத்திரி ஸ்பெஷல்: அறிவோம் ஐம்பது!

- Advertisement -
golu navarathri
golu navarathri

நவராத்திரி ஒன்பது நாட்களும் பகவத் கைங்கர்யம் பஜனை பாடல்கள் பாடுவது மிகவும் உத்தமம். அப்போது மூன்று தேவிகளின் கருணைப் பார்வை முழுவதும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள்

நவராத்திரி திருவிழா யுகங்கள் பல கடந்தும் அற்புதமாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது..

நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் த்ரேதா யுக ஸ்ரீராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

மஹா லஷ்மியும் நாராயணனும் சிவபெருமானும், பார்வதியும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் பூரணமாக கிடைக்கும்.

நவராத்திரி நாளில் வரும் ஸப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் லஷ்மியின் சஹஸ்ரநாமம் ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமம் அபிராமி அந்தாதி நவாக்சரி மந்திரத்தையும் பாராயணம் செய்தால் கூடுதல் பலன்களைத் தரும்.

பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சத்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மஹாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

நாம் காணும் அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை மற்றும் மஹா லஷ்மியும் அனைத்து தேவர்களும் ஒரே அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டார்கள் என்பது நம்பிக்கையாகும்.

ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள் நம் ஆச்சாரியார்கள் மற்றும் சாஸ்திரமும் அதே கூறுகிறது.

நவராத்திரி பூஜையை ஹஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவதும் வந்தாலும் நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் லஷ்மி நாராயண பூஜை மற்றும் சிவ பூஜையும் இரவில் மஹாலக்ஷ்மி பூஜை மற்றும் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் சாளக்கிராம பூஜை மற்றும் லிங்க பூஜை செய்து ஹரி மற்றும் ஹரனின் 1008 நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது முதலில் கணபதியையும் ஸ்யம்பவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது.
அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு சாக்பீஸ் பயன்படுத்தினாலோ,
எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

ஒன்பது நாட்களிலும் மஹா லஷ்மி மற்றும் தேவியாக பாவித்து, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து ராஜ உபசாரம் செய்ய வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பது கூடாது.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) சுமங்கலிப் பெண்களுக்கு மற்றும் ஏழைகளுக்கும் தானமாக அளிக்க வேண்டும்.

தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே மிகவும் சிறப்பானது.

தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்பட வேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையை மஹாலக்ஷ்மியே ஏற்றுக் கொள்கிறாள்.

என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

நவதானியச் சுண்டல் நவக்கிரஹ நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை லஷ்மியின் சஹஸ்ரநாம பாராயணம் செய்வது லஷ்மி தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை
முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல
திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

லஷ்மியும் அம்பிகையும் சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

நவராத்திரி 9 நாட்களும் மகா லஷ்மியையும சக்தியையும் மனமார வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் லஷ்மியும அம்பாளும் மனமகிழ்ந்து வீட்டிற்கு வருவார்கள்.

நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்தால் லஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.

கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் லஷ்மி மற்றும் அம்பாளின் அனுக்கிரஹமும், நவக்கிரகங்களின் பலன்களும் கிடைக்கும்.

நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை
தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் அதிகரித்துள்ளது இது மிகவும் நல்ல விஷயங்களாகும்.

முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூல தஷிணை கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9
சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி தொடர்பான ஸலோகம் மந்திரம் தெரியவில்லையா கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ அல்லது ஓம் மஹா லஷ்ம்யை நமஹ என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

நெமிலியில் த்ரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப்படும் தேங்காய்அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருப்பது மிகவும் அதிசயமாகும்.

நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,
எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

ஸ்ரீராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று
தேவி பாகவதம் சொல்கிறது.

கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்த்ர ஆவர்த்தி இருக்கும்.

தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

விநாயகர் ஸ்ரீராமர், விஸ்வாமித்திரர்,
சனகாதி மஹரிஷிகள் ஸப்த ரிஷிகள், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, சிவபெருமான் முருகன் வனவாசத்தில் பாண்டவர்கள் ராவணன் ஆகியோர்
நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று ப்ரம்ஹ வைவர்த்த புராணங்கள் சொல்கின்றன.

வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்ட பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, வருண பூஜை அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.
நினைவிருக்கட்டும்

நவராத்திரியில் யார் உங்கள் வீட்டிற்கு வந்தாலும் அவர்களை அலட்சியப் படுத்தக் கூடாது. மஹா லஷ்மியாக பாவித்து ராஜ உபசாரம் செய்ய வேண்டும். குங்குமம் நீங்கள் நெற்றியில் இட்டு அவர்களுக்கும் கொடுக்க தவறவே கூடாது.

ஒரு 25 வருடங்களுக்கு முன்பு வீட்டிற்கு கொலு பார்க்க வருபவர்களை பாடச்சொல்லி அழகாக ரசித்து கேட்பார்கள். அற்புதமாக இருக்கும்.
ஆனால் இப்போது எல்லோரும் கூச்சப்படுகிறார்கள்.

பகவானின் பாடல்களை பாடவும் கேட்கவும் நம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எல்லோருக்கும் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்க மனதார ப்ரார்த்தனை செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe