பன்னிருகையால் அருள்!

Published:

murugar 2
murugar 2

முருகப் பெருமான் 6 தலைகளும், 12 கரங்களும் கொண்டு ஆறுமுகமாக பக்தர்களை காக்கின்றார். அவரின் பன்னிரு கரங்களில் 12 வெவ்வேறு ஆயுதங்களுடன் இருப்பதோடு, அந்த கரங்கள் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்பதை பார்ப்போம்.

முருகனின் பன்னிரண்டு கரங்களில் வேலைகள் :
முதல் கை – தேவர், முனிவர்கள், பக்தர்களை காக்கிறார்.

இரண்டாவது கை: முதல் செய்யும் வேலைக்கு மற்றொரு கை உதவி செய்கிறது.

மூன்றாவது கை – உலகத்தை தன் கைக்குள் அடக்கு வைத்து காக்கின்றார்.

நான்காவது கை – தேவையற்ற ஆசைகளை நிராகரிக்கின்றார்.

ஐந்தாவது கை – பக்தர்களுக்கு நிறைந்த அருளை அருளுகின்றார்.

ஆறாவது கை – தன் தாய் கொடுத்த வேல் கொண்டு பக்தர்களைக் காக்கிறார்.

7வது கை – சரவணபவ என்னும் சொல்லுக்குரிய பொருளை முனிவர்கள் போன்ற தவப்புதல்வர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தும் விதமாக மார்பின் அருகே வைத்துள்ளார்.

8வது கை – மார்பில் இருந்து தொங்கும் மாலையை தாங்குகிறது

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

9வது கை – யாகத்தினால் கிடைக்கக் கூடிய பலனை ஏற்கிறது.

10வது கை – இதுவும் யாகத்தினால் கிடைக்கக் கூடிய பலனை ஏற்கிறது.

11வது கை – மழையை கொடுத்து உலகை காக்கிறது.

12ம் கை – தன் மனைவிகளாகிய வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.

Related articles

Recent articles

spot_img