அறப்பளீஸ்வர சதகம்: கேடு கெட்டவனுக்கு கிடைக்கும் பதவி!

arapaliswarar - 2026

நற்பண்புக்கு இடமிலார்

வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு
வெங்காஞ் சொறிப்பு தலிலே
வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்
மேவுமோ? மேவா துபோல்,
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
கூடவே இளமை உண்டாய்க்,
கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க
குவலயந் தனில்அ வர்க்கு,
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்
நிதானமும் பெரியோர் கள்மேல்
நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்
நினைவிலும் வராது கண்டாய்;
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
அண்ணலே ! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

புகழப்படுகின்ற மறையின் பொருளான கொடையாளியே!, தலைவனே! அருமை தேவனே!, வெறி
பிடித்த ஒரு குரங்கு, பேயாற் பிடிக்கப்பட்டு, அதன்மேற்) கள்ளையுங் குடித்து, (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே
செல்லும் நிலை உண்டாகுமோ? (அவ்வாறு அக்
குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்),
சிற்றறிவுடன், மேலும் இழிசெயலுடைய குலத்தினராய், அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து)
அவர்கட்கு, சிறிது
தலைமைப்பதவி கிடைத்தாலும், உலகத்தில், நிறைந்த கடவுள் அன்பும், ஒழுக்கமும், பெருந்தன்மையும், அமைதியும், அறிஞரிடம் நட்பும், கொடைப்பண்பும்,
(ஆகிய) இவைகள் யாவும்
நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.

பிறருக்குப் பயன்படாமலும், தீமை செய்துகொண்டும், மற்றவரைத்
துன்புறுத்தியும் உயர்ந்த பண்பு பதியப்பெறாத பரம்பரை. இயல்பாகவே
குறும்பு செய்யும் குரங்கு வெறிகொண்டு பேய் பிடித்துக், கள்ளைக்
குடித்துத் தினவெடுத்துத் தேள் கொட்டுதலையும் பெற்றாற் செய்யும்
பிழைகள் போலவே, இயல்பாகவே சிற்றறிவுடைய பரம்பரையிலே
பிறந்தவர்க்கு இளமையும் தலைமைப்பதவியும் கிடைத்தால் தவறுகள்
செய்வார்களேயன்றி, நலம்புரியமாட்டார்கள்.

அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடைபிடிப்பர். என்பதாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories