நாளை ஏப்14 வியாழக்கிழமை
சுபகிருது தமிழ் புத்தாண்டு காலை 08:48 (+5.30)மணிக்கு பிறக்கிறது.60 தமிழ் வருடங்களில் 2022 ஆம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது 60 ஆண்டுகளில் 36 ஆவது ஆண்டாகும். சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள் என பெரியவர்கள் கூறுகின்றனர்.
ஏப்ரல் 14 வந்துவிட்டது. தமிழ் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடும் போது, இந்தியா முழுவதும் உள்ள பல மாநில மக்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை அதே நாளில் கொண்டாடுகிறார்கள் .இது கேரளாவில் விஷு பண்டிகையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
சித்திரை தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்துக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, வாயில்களில் அழகாகக் கோலமிட்டு வீட்டு வாசலின் கதவுகளில் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கின்றனர்.
கொன்றை மலர் பூக்களை கொத்தாக பறித்து வீட்டுவாசல் மற்றும் பூஜை அறையில் வைத்து அலங்கரிப்பது இந்துக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.
சுவாமி அறையில் கண்ணாடி மற்றும் மங்கள பொருட்களும் பழங்கள் காய்கறிகளை வைத்து புத்தாண்டு பிறந்ததும் மங்கள பொருட்களில் கண் விழிக்க சிறந்த பலன்களை தரும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் உள்ளதால் தமிழ்புத்தாண்டில் தமிழர்கள் இதை செய்ய மறப்பதில்லை.பின்னர், தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு ஆகிய பதினாறு வகையான சமித்துகளால் காய்ச்சப்படும் மருத்து நீரை ஆலயங்களில் பெற்று தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை உள்ளது.
நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று பஞ்சாங்கம் வாசிப்பதை கேட்டு தமிழ்புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சித்திரை அன்று அறுவகையான சுவை கொண்ட உணவுகள் தயாரித்து பகிர்ந்து உண்பது இந்துக்களின் மரபாக உள்ளது.
இடைகாட்டு சித்தரின் சுபகிருது வருட வெண்பாவில்
சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமரம் விலைகுறையு மான்சாம் – சுபமாகும.நாடெங்கும் மாரிமிகு நல்விளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்.
என கூறப்பட்டுள்ளது.
சுபகிருது ஆண்டில் சோழ நாட்டில் பல பொருட்கள் வீணாகும். மண் பண்டங்கள் விலை குறைந்திடும். நல்ல மழை பெய்து விளைச்சல் பெருகும். மழையால் பாதிப்பு இவ்வாண்டு இருக்காது.என சுபகிருது ஆண்டின் பொதுவான பலன் கூறப்பட்டுள்ளது.





