spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!

அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!

- Advertisement -

கவிஞன்

தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்
தேன்மடை திறந்த தெனவே
செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்
தெரிந்துரைசெய் திறமை யுடனே
விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்
விரிவிலக் கணவி கற்பம்
வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்
மிக்கப்ர பந்த வண்மை
உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை
யொத்ததிக சபைகண் டபோ
தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம
துரைப்பவன் கவிஞ னாகும்!
அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

நஞ்சை அள்ளிப்பருகிய கனிபோலுஞ் சிவந்த வாயனே!, (உயிர்களிடம்)
அன்புடையவனே!, தூயவனே!, அருமை .தேவனே!,
தெளிந்த அமுதவொழுக்குப் போலவும்; இனிமை மிகுந்த புதிய தேன்
மடைதிறந்தது போலவும்; சொல்லப்படும்
முத்தமிழுடன், நால்வகைக்
கவிகளையும் நால்வகைப் பொருளையும் அறிந்து, கூறும் ஆற்றலோடும், கூறுதற்கரிய காவியத்தின் உட்பொருளையும் அணியையும் விரிவான ஐவகையிலக்கணத்தையும், வேறும்உள தொன்னூல் வழக்கும் உலகத்து இயல்பும் மிக்கப் பிரபந்த வன்மை உள்ள எல்லாம்
அறிந்து மற்றும் இருக்கின்ற பழைமையான நூல்வழக்கையும்
உலகவழக்கையும் மிகுந்த பிரபந்தங்களின் சிறப்பையும் மேலும் உள்ளயாவற்றையும் அறிந்து, அலை அடங்கிய கடலைப்போல விருந்து, பேரவையைப் பார்த்த
காலத்தில், பேரலை முழங்கும் கடலைப்போலச் சொற்பொழிவு
செய்பவன் கவிஞன் ஆவான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe