இன்று ஐப்பசி – மூலம் சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த சுதந்திரம்..

IMG 20221029 WA0123 - 2026

சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த அழகு திகழ்ந்திடும் ஐப்பசி திருமூலம் திருநாளான இன்று சகல வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவாய்மொழி ஈடு முப்பத்து ஆறாயிரப்படி வியாக்யானத்தை, திருவரங்கம் பெரிய கோயிலில் சுவாமி நம்பெருமாளுக்கு, மாமுநிகள் சாதித்தது, சுவாமியின் வைபவத்தில் முக்கியமானது. பரிதாபி ஆண்டு, ஆவணி 31-ம் தேதி, சுக்ல சதுர்த்தி, சுவாதி நட்சத்திரம் கூடிய, வெள்ளிக்கிழமை (16.9.1432) அன்று சுவாமியின் காலட்சேபம் தொடங்கியது. பிரமாதிச ஆண்டு, ஆனி மாதம், மூலம் நட்சத்திரம், பவுர்ணமி திதி, ஞாயிற்றுக்கிழமை (9.7.1433) அன்று காலட்சேபம் நிறைவுற்றது. அன்று எம்பெருமான் ஒரு சிறுவனாக வந்து ‘ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்’ என்ற ஸ்லோகத்தை வெளிப்படுத்தினார். பின்பு மூலஸ்தானத்துக்குள் சென்று அந்த சிறுவன் மறைந்தான்.

மாமுநிகளை குருவாக ஏற்று, தாம் சீடராக ஓராண்டுக்கு இருந்து ஈடு முப்பத்து ஆறாயிரப்படியைக் கேட்ட சுவாமி நம்பெருமாள், அந்த நிகழ்வு நிறைவுற்ற நாளில், மாமுநிகளை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் மூலம் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய பெருமை மணவாள மாமுநிகளைத் தவிர வேறு எந்த ஆசார்யருக்கும் கிட்டாதது.

உடையவரின் மறு அவதாரமாக வைணவர்களால் போற்றப்பட்ட ஸ்ரீ மணவாள‌மாமுனிகள் அவதரித்த தினமான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர்‌ ஸ்ரீரங்கம் உட்பட சகல வைணவத் தலங்களில் சிறப்பு மங்களாசாசனம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கநாதரின் குருவாக பார்க்கப்படுகின்றவர், அதனால் தான் தன் குருவான மணவாள மாமுனிகளுக்கு அரங்கநாதனே மணவாளனாக சிறு குழந்தை வடிவில் வந்து தனியன் சமர்பித்தார்.நம்மாழ்வார் உலகுக்கு அருளிய நாலியிரத்தை நிறைவு செய்தது இவர் தான்.சமய பேதம் இருந்த பொழுது வைணவத்தை உலகில் தழைக்கச் செய்தவர்

ஆதிசேஷனின் அம்சம், உடையவரின் மறு அவதாரம் என போற்றப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகளை போற்றுவோம், வணங்குவோம்….

ஆச்சார்யான் திருவடிகளே சரணம்,கருணை பொங்கிய கண்ணினை வாழியே!!பொய்யில்லாத மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என பலரும் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தியது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories