இன்று ஐப்பசி – மூலம் சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த சுதந்திரம்..

IMG 20221029 WA0123 - 2026

சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த அழகு திகழ்ந்திடும் ஐப்பசி திருமூலம் திருநாளான இன்று சகல வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவாய்மொழி ஈடு முப்பத்து ஆறாயிரப்படி வியாக்யானத்தை, திருவரங்கம் பெரிய கோயிலில் சுவாமி நம்பெருமாளுக்கு, மாமுநிகள் சாதித்தது, சுவாமியின் வைபவத்தில் முக்கியமானது. பரிதாபி ஆண்டு, ஆவணி 31-ம் தேதி, சுக்ல சதுர்த்தி, சுவாதி நட்சத்திரம் கூடிய, வெள்ளிக்கிழமை (16.9.1432) அன்று சுவாமியின் காலட்சேபம் தொடங்கியது. பிரமாதிச ஆண்டு, ஆனி மாதம், மூலம் நட்சத்திரம், பவுர்ணமி திதி, ஞாயிற்றுக்கிழமை (9.7.1433) அன்று காலட்சேபம் நிறைவுற்றது. அன்று எம்பெருமான் ஒரு சிறுவனாக வந்து ‘ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்’ என்ற ஸ்லோகத்தை வெளிப்படுத்தினார். பின்பு மூலஸ்தானத்துக்குள் சென்று அந்த சிறுவன் மறைந்தான்.

மாமுநிகளை குருவாக ஏற்று, தாம் சீடராக ஓராண்டுக்கு இருந்து ஈடு முப்பத்து ஆறாயிரப்படியைக் கேட்ட சுவாமி நம்பெருமாள், அந்த நிகழ்வு நிறைவுற்ற நாளில், மாமுநிகளை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் மூலம் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய பெருமை மணவாள மாமுநிகளைத் தவிர வேறு எந்த ஆசார்யருக்கும் கிட்டாதது.

உடையவரின் மறு அவதாரமாக வைணவர்களால் போற்றப்பட்ட ஸ்ரீ மணவாள‌மாமுனிகள் அவதரித்த தினமான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர்‌ ஸ்ரீரங்கம் உட்பட சகல வைணவத் தலங்களில் சிறப்பு மங்களாசாசனம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கநாதரின் குருவாக பார்க்கப்படுகின்றவர், அதனால் தான் தன் குருவான மணவாள மாமுனிகளுக்கு அரங்கநாதனே மணவாளனாக சிறு குழந்தை வடிவில் வந்து தனியன் சமர்பித்தார்.நம்மாழ்வார் உலகுக்கு அருளிய நாலியிரத்தை நிறைவு செய்தது இவர் தான்.சமய பேதம் இருந்த பொழுது வைணவத்தை உலகில் தழைக்கச் செய்தவர்

ஆதிசேஷனின் அம்சம், உடையவரின் மறு அவதாரம் என போற்றப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகளை போற்றுவோம், வணங்குவோம்….

ஆச்சார்யான் திருவடிகளே சரணம்,கருணை பொங்கிய கண்ணினை வாழியே!!பொய்யில்லாத மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என பலரும் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தியது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories