“பெரியவா பட்டத்துக்கு வந்த புதிதில்”
(ஸ்ரீகார்யம் பற்றி சொன்ன சுவையான சம்பவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
இதை பெரியவா மொழியா (வாயால) கேட்போம். “நான் ஸ்வாமிகளா வந்தப்போ ஒரு விசித்திரமான
சூழ்நிலை. நான் பட்டமாயி அஞ்சு வருஷம் வரை
மைனர்தானே? (சிரித்து, அதிநயமான அபிநயத்தில்
கழுத்துச் செயின்,காலர், ஸென்ட் ஆகியவற்றுக்குக்
குறிப்புக் காட்டி) அந்த ‘மைனர்’ இல்லே; வயஸில
மைனர்தானே? அதனால நிர்வாகம் ஒரு கார்டியன்
கிட்ட இருந்தது.அவர் யார்னா பரமகுரு ஸ்வாமிகள்
(கலவைப் பெரியவாள்) பட்டத்துக்கு வந்த நாள்லேருந்து
மடத்து ஸ்ரீகார்யமா (மேலாளராக) இருந்தவர்தான்.
அந்த ஸ்வாமிகளும் பட்டத்துக்கு வரச்சே மைனரா
இருந்தவாளானதால் அவாளுக்கும் இவரேதான்
கார்டியனாக இருந்திருக்கார்.
அவா பீடாதிபத்யம் வஹிச்ச பதினேழு வருஷத்துல மொத(ல்)
பத்து பன்னண்டு வருஷம் வரை இவர் ஸரியாகவே
நிர்வாகம் பண்ணிண்டிருந்தார். ஆனா போகப்போக
வயஸு ரொம்ப ஆயிட்டதாலே ஞாபகப் பெசகு; அது தெரியாம
இருக்கிறதுக்காகப் பண்ற காரியங்கள்ல கொஞ்சம் தப்புத்
தண்டா; கேள்வி கேட்டா தன் வயஸை, அத்தனைக் கால
ஒழைப்பைச் சொல்லி சீர்றது (சீறுவது); இதிலே சிலபேர்கிட்ட
ஒரே கோவம். அதனாலேயே அநுகூலமாயிருக்கறவாகிட்ட
அதி தாக்ஷிண்யம்னு ஆயிட்டார்.
“இப்படிப்பட்ட ஸந்தர்ப்பத்திலே ஒண்ணுந்தெரியாத நான்
புது ஸ்வாமிகளா வந்து அவர் கார்டியனா ஆனதுல அவருக்கு
ரொம்பவும் ஸ்தானம் குடுத்துப்போச்சு. அப்போ நான்
ப்ரத்யக்ஷத்துலே பாத்ததிலே, அவருக்கு தாரணா சக்தி
(விஷயங்களை அறிவால் கிரஹித்துக் காக்கும் திறன்)
பாதி போயிடுத்து; த்ருஷ்டி முக்கால் போயிடுத்து;காது முழுக்கவே போயிடுத்து! எடுப்பார் கைப்பிள்ளையா என்னவோ
பண்ணிக்கிண்டிருந்தார். அவரைக் கேக்க ஆளில்லை. “இதெல்லாம் சொல்றதுக்கே கஷ்டமாத்தான் இருக்கு. ‘ஸத்கார்யம்,ஆசார்யாள் கைங்கர்யம், ஜன்மாவைக்
கடைத்தேத்திப்போம்’னு மடம் மாதிரி ஒரு எடத்துக்கு வந்து, ஒரு
காலத்துல நன்னாவும் ஸேவகம் பண்ணிண்டிருந்தவாளையும்
அப்பறம் ஏதோ ஒரு மாயை வழுக்கிவிட்டு வீணாப் போயிடறதை
நெனச்சா துக்கமாத்தான் இருக்கு. பின்னு எதுக்கு கதை
சொல்றேன்னா,
கர்மாவோ,கிர்மாவோ எதுக்காகவோ மாயையை ஏவிவிட்டு
இப்படியெல்லாம் கோளாறா நடக்கப் பண்ற அந்த ஈச்வர
சக்தியே எப்படி ஸமயத்திலே இந்த மடத்தைக் கட்டிக்


