June 16, 2025, 11:42 AM
32 C
Chennai

ஸ்ரீவிலி ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்..

IMG 20230405 WA0104
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் ரங்கமன்னார் க்கும் பங்குனி உத்திரம் நாளான இன்று இரவு திருக்கல்யாணம். சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் 108 வைணவ தேசங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு கோவில் கொண்டுள்ள ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளன்று திருக்கோவில் முன்புள்ள ஆடிப்பூர பந்தலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழும் வண்ணம் சிறப்பாக நடைபெறும்.

IMG 20230405 WA0101
#image_title

இந்த ஆண்டு ஆண்டாள் ரெங்க மன்னார் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. அன்று தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்க மன்னார் ரத வீதிகள் வழியே வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா நேற்று (5ஆம் தேதி) காலை துவங்கியது.

ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் காலை 7 மணிக்கு மேஷ லக்னத்தில் செப்புத்தேர் எனும் கோ ரதத்தில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்கி செப்புத் தேரினை நான்கு ரத வீதிகள் வழியே இழுத்து நிலையம் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு சுவாமிகள் வீதி புறப்பாடாகியது.

முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா இரவு 7:30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் திருக்கல்யாணத்தினை நடத்தி வைத்தார்.

தலைமை அர்ச்சகர் ஸ்ரீ வாரி முத்துப்பட்டர் ரங்கராஜன் என்ற ரமேஷ் மணியம் கோபி வேதபிரான் சுதர்சன் கிச்சப்பன் வெங்கடேச ஐயங்கார் ஆகியோர் பூஜைகள் நடத்தி வைத்தனர்.

திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பாக்கெட் வழங்கப்பட்டது. ஆண்டாள் பெரியாழ்வார் ட்ரஸ்ட் சார்பில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பக்தர்கள் சிரமமின்றி திருக்கல்யாணத்தினை தரிசிக்க பல இடங்களில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. ஆன்மீக சொற்பொழிவாளர் ராஜாராம் திருக்கல்யாணத்தினை வர்ணனை செய்தார். விழா ஏற்பாடுகளை மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க. செல்லத்துரை கோவில் தக்கார் கி. ரவிச்சந்திரன் செயல் அலுவலர் எம்.கே. முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories