January 26, 2025, 7:54 AM
22.3 C
Chennai

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சிவ ரூபம்!

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கல், அதிர்ஷ்ட தெய்வம் என இருக்கும். அது போலவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிர்ஷ்ட தெய்வம், தல விருட்சம், கல், கோயில் என இருக்கிறது.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு இறைவனை வணங்குவதன் மூலமே கிடைக்கின்றது. அண்ட சராசரங்களை காத்து  ரட்சிக்கும் எம்பெருமானை வணங்கினால் எந்தத் துன்பமும் நம்மை நெருங்காது.

‘சிவ சிவ’ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் சிவனை வழிபட்டால் சிறப்பானது என்பதைப் பார்ப்போம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவ ரூபங்களை வழிபட்டு வந்தால் துன்பமற்ற வாழ்வை அடையலாம் என்பது உறுதி.

1. அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவனை வணங்க வேண்டும்.

2. பரணி – சக்தியுடன் கூடிய சிவபெருமானை வழிபட வேண்டும்.

3. கிருத்திகை – தனியாக உள்ள சிவனை வணங்க வேண்டும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா!

4. ரோகிணி – பிறை சூடியப் பெருமானை வணங்குவது நல்லது.

5. மிருகசீரிஷம் – முருகனுடன் இருக்கும் சிவனை வணங்குவது சிறந்தது.

6. திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் தொழுதல் வேண்டும்.

7. புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவனை வழிபட நன்மை.

8. பூசம் – நஞ்சுண்டும் சிவ ரூபத்தை வழிபட நல்லது.

9. ஆயில்யம் – விஷ்ணுவுடன் உள்ள சிவனை வழிபடவும்.

10. மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன் வணங்குதல் நலம்.

11. பூரம் – அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது சிறப்பு.

12. உத்திரம் – நடராஜ பெருமான் – தில்லையம்பதியை வழிபட வேண்டும்.

13. அஸ்தம் – தியான கோலத்தில் இருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும்.

14. சித்திரை – பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்தை தரிசிக்கும் சிவனை வணங்க நல்ல பலனை தரும்.

15. சுவாதி – சகஸ்ரலிங்கத்தை தரிசித்து வணங்க வேண்டும்.

ALSO READ:  அல்லல் பிறவியறுக்கும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

16. விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவனை வழிபடவும்.

17. அனுஷம் – இராமர் வழிபட்ட சிவனை வழிபட்டால் நல்லது.

18. கேட்டை – நந்தியுடன் உள்ள சிவனை வழிபட்டால் சிறப்பு.

19. மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன் கோலத்தை தரிசிக்க வேண்டும்.

20. பூராடம் – சிவ சக்தி கணபதியை வழிபடவும்.

21. உத்திராடம் – ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவனை வழிபட நல்லது.

22. திருவோணம் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவபெருமானை வழிபடவும்.

23. அவிட்டம் – மணக்கோலத்துடன் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும்.

24. சதயம் – ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவனை கண்டு வழிபடவும்.

25. பூரட்டாதி – சிவன் சக்தி விநாயகரை மடியில் வைத்திருக்கும் காட்சியை வணங்க நல்லது.

26. உத்திரட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவனை வணங்கலாம்.

ALSO READ:  தென்கரை கோயிலில் சூரசம்ஹாரம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

27. ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவனை வணங்க வேண்டும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று