திருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து!

Published:

08 June24 Tirupathi - 2026

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு வைபவத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு வைபவம், இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி இதற்கான அங்குரார்ப்பண பூஜைகளும், 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சம்ப்ரோக்ஷண நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று, அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தெரிவித்தார்.

இதை முன்னிட்டு, அடுத்த மாதம் 9-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17-ஆம் தேதி காலை 6 மணி வரை பெருமாளை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், திருப்பதியில் இருந்து திருமலைக்கான போக்குவரத்துக்கும், மலைப்பாதையில் செல்வதற்கும் அனுமதியில்லை என்றும் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img