தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்! நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்!

thiruvavaduthurai atheenam - 2026

தமிழகத்தின் பழைமையான ஆதினமாகவும், தமிழ் வளர்த்த பெரும் ஆதினமாகவும் திகழும் திருவாவடுதுறை ஆதினத்தின் தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்களையும் அளித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கை:

* வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இவற்றுக்கெல்லாம் ஆதாரமான இறை உணர்வும் தழைத்திட உறுதுணையாய் இருப்பவை பண்டிகைகள் ஆகும். அம்முறையில் தீபாவளி பண்டிகை புத்துணர்வை பெருகச் செய்வதில் சிறப்பிடம் பெறுகிறது.

* தீபாவளியன்று அதிகாலை எழுந்து நீராடுதல் கங்கா ஸ்நானத்திற்குச் சமமாக மதிக்கப்படுகின்றது. எனவே, தீபாவளி நாளில் அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு பெரியோரிடம் ஆசிபெற வேண்டும்.

* வாண வேடிக்கையில் ஈடுபடும்போது நம்முடைய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதிலும் அக்கறைகாட்ட வேண்டும்.

* சுற்றத்தார், நண்பர்களிடம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு நல்லுறவை தழைக்கச் செய்ய வேண்டும்.

* பண்டிகை காலங்கள் அப்போதைய மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல. அம்மகிழ்ச்சியில் இறை பக்தி உணர்வுடன் ஈடுபட்டால் நம் வாழ்க்கையில் சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தும். எதிர்கால ஏற்றங்களுக்கும் வழிபிறக்கும்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

* சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவும் தீபாவளி நாளில் மனப்பூர்வமான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

* இந்த ஆர்வத்தை நாமும் வளர்த்து நம் தலைமுறையினரையும் வளர்க்குமாறு நெறிப்படுத்த வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பண்டிகையின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்கள் சிறு வயதிலிருந்து இறைபக்தி உணர்வுடன் பண்டிகையை கொண்டாடும் நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்குமாறு செய்ய வேண்டும்.

* மக்கள் யாவரும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்திட தீபாவளி பண்டிகையை நன்முறையில் பயன்படுத்த வேண்டும்.

* இந்த தீபாவளி திருநாளில் அனைவருக்கும் இன்பமும், அமைதியும், வளங்களும், இறை பக்தியும் தழைத்து சிறந்திட வேண்டும் என நமது ஆன்மார்த்த மூர்த்தியாக ஸ்ரீஞானமா நடராஜ பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories