February 22, 2026, 4:35 AM
25.6 C
Chennai

தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்! நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்!

thiruvavaduthurai atheenam - 2026

தமிழகத்தின் பழைமையான ஆதினமாகவும், தமிழ் வளர்த்த பெரும் ஆதினமாகவும் திகழும் திருவாவடுதுறை ஆதினத்தின் தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்களையும் அளித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கை:

* வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இவற்றுக்கெல்லாம் ஆதாரமான இறை உணர்வும் தழைத்திட உறுதுணையாய் இருப்பவை பண்டிகைகள் ஆகும். அம்முறையில் தீபாவளி பண்டிகை புத்துணர்வை பெருகச் செய்வதில் சிறப்பிடம் பெறுகிறது.

* தீபாவளியன்று அதிகாலை எழுந்து நீராடுதல் கங்கா ஸ்நானத்திற்குச் சமமாக மதிக்கப்படுகின்றது. எனவே, தீபாவளி நாளில் அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு பெரியோரிடம் ஆசிபெற வேண்டும்.

* வாண வேடிக்கையில் ஈடுபடும்போது நம்முடைய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதிலும் அக்கறைகாட்ட வேண்டும்.

* சுற்றத்தார், நண்பர்களிடம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு நல்லுறவை தழைக்கச் செய்ய வேண்டும்.

* பண்டிகை காலங்கள் அப்போதைய மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல. அம்மகிழ்ச்சியில் இறை பக்தி உணர்வுடன் ஈடுபட்டால் நம் வாழ்க்கையில் சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தும். எதிர்கால ஏற்றங்களுக்கும் வழிபிறக்கும்.

* சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவும் தீபாவளி நாளில் மனப்பூர்வமான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

* இந்த ஆர்வத்தை நாமும் வளர்த்து நம் தலைமுறையினரையும் வளர்க்குமாறு நெறிப்படுத்த வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பண்டிகையின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்கள் சிறு வயதிலிருந்து இறைபக்தி உணர்வுடன் பண்டிகையை கொண்டாடும் நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்குமாறு செய்ய வேண்டும்.

* மக்கள் யாவரும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்திட தீபாவளி பண்டிகையை நன்முறையில் பயன்படுத்த வேண்டும்.

* இந்த தீபாவளி திருநாளில் அனைவருக்கும் இன்பமும், அமைதியும், வளங்களும், இறை பக்தியும் தழைத்து சிறந்திட வேண்டும் என நமது ஆன்மார்த்த மூர்த்தியாக ஸ்ரீஞானமா நடராஜ பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories