தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்! நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்!

thiruvavaduthurai atheenam - 2026

தமிழகத்தின் பழைமையான ஆதினமாகவும், தமிழ் வளர்த்த பெரும் ஆதினமாகவும் திகழும் திருவாவடுதுறை ஆதினத்தின் தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்களையும் அளித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கை:

* வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இவற்றுக்கெல்லாம் ஆதாரமான இறை உணர்வும் தழைத்திட உறுதுணையாய் இருப்பவை பண்டிகைகள் ஆகும். அம்முறையில் தீபாவளி பண்டிகை புத்துணர்வை பெருகச் செய்வதில் சிறப்பிடம் பெறுகிறது.

* தீபாவளியன்று அதிகாலை எழுந்து நீராடுதல் கங்கா ஸ்நானத்திற்குச் சமமாக மதிக்கப்படுகின்றது. எனவே, தீபாவளி நாளில் அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு பெரியோரிடம் ஆசிபெற வேண்டும்.

* வாண வேடிக்கையில் ஈடுபடும்போது நம்முடைய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதிலும் அக்கறைகாட்ட வேண்டும்.

* சுற்றத்தார், நண்பர்களிடம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு நல்லுறவை தழைக்கச் செய்ய வேண்டும்.

* பண்டிகை காலங்கள் அப்போதைய மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல. அம்மகிழ்ச்சியில் இறை பக்தி உணர்வுடன் ஈடுபட்டால் நம் வாழ்க்கையில் சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தும். எதிர்கால ஏற்றங்களுக்கும் வழிபிறக்கும்.

* சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவும் தீபாவளி நாளில் மனப்பூர்வமான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

* இந்த ஆர்வத்தை நாமும் வளர்த்து நம் தலைமுறையினரையும் வளர்க்குமாறு நெறிப்படுத்த வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பண்டிகையின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்கள் சிறு வயதிலிருந்து இறைபக்தி உணர்வுடன் பண்டிகையை கொண்டாடும் நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்குமாறு செய்ய வேண்டும்.

* மக்கள் யாவரும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்திட தீபாவளி பண்டிகையை நன்முறையில் பயன்படுத்த வேண்டும்.

* இந்த தீபாவளி திருநாளில் அனைவருக்கும் இன்பமும், அமைதியும், வளங்களும், இறை பக்தியும் தழைத்து சிறந்திட வேண்டும் என நமது ஆன்மார்த்த மூர்த்தியாக ஸ்ரீஞானமா நடராஜ பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories