Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 1

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM - 2026

அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 1
????????????????????????????????????????????????

திருவரங்கத்தில் பகல் பத்து அத்யயன உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது. திருநெடுந்தாண்டகத் திருநாள் என்று இதற்கு பெயர். பல தேசங்களிலிருந்து மக்கள் வெள்ளமென இங்கு குழுமியுள்ளனர். மண்டப, ப்ரகார கோபுரங்கள் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நம்மாழ்வார், கலியன், மற்ற ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் அரங்கன் புறப்பாட்டிற்காக தயாராகக் காத்திருக்கின்றனர். எங்கும் உற்சாக வெள்ளம்.

பெருமாளின் சன்னிதிக் கதவுகள் திறந்தவுடன் கஜ, ஸிம்ஹ கதியுடன் நம்பெருமாள் எழுந்தருளினார். ஆஹா, ஆஹா அடியவர் வெள்ளத்தினுடே ஒரு சோதி வெள்ளமென பெருமாளின் புறப்பாடு. நம்பெருமாளுக்கு நடையழகா? அல்லது நம்பெருமாளைச் சேர்ந்ததால் இந்த நடை தான் அழகு பெற்றதோ? என்பதாக எண்ணம் ஏற்படுகிறது.

இங்குள்ள அடியார்களுக்கு இவன் ஒருவனே கதிபுகலிடம். இவனுக்கோ பாதுகையே கதி. ஆம் ரங்கனின் நடையழகைத் தருவது அவன் தன் திருவடியில் துலங்கும் பாதுகைகள்தானே. அதனால்தான் ஸ்வாமி தேசிகன் அரங்கனுக்கும் கதி (நடை)யளிக்கும் பாதுகையே நமக்கும் கதி (புகலிடம்) என்று போற்றுகிறார்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

  ஆழ்வார்களும், ஆசார்ய ஸார்வபௌமர் ராமானுஜரும் ரங்கா, ரங்கா என மிழற்றி கண்ணீர் சிந்துகின்றனர். அவர்கள்தான் கண்ணநீர் கைகளால் இறைக்குமலர்களாயிற்றே. ராமானுஜரோ! பொன்னரங்கமென்னில் மயலே பெருக்குமவர். இப்படி ஒவ்வொருத்தர்க்குண்டான அனுபவத்துடன் உற்சாகத்துடன் நம்பெருமாளை எதிர் நின்று சேவித்தனர். பர்வதத்தின் குகையினின்றும் சிங்கம் புறப்பட்டது போன்று வெளிவந்த ரங்கன் கம்பீரமாக எதிர்நின்றான். அடியாரின் கூட்டம் ஆர்பரித்தது. அவன்தன் திவ்ய கடாட்சத்தால் எங்கள் மேல் சாபம் இழிந்தது என ஆனந்தித்தது.

  முதலில் நம்மாழ்வார், பின்னர் கலியன், அதன்பின் ராமானுஜர் அதற்குப்பின்னர் ஏனைய ஆழ்வார்கள் என அனைவரும் அணிவகுத்து நின்றனர். கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து நீண்ட அப்பெரிய கண்களால் அரங்கன் அனைவரையும் பார்த்தான். மந்தகாஸப் புன்னகையால் அவனது பார்வை அனைவரையும் மயக்கியது. அனைவரையும் முழுவதுமாக ஒரு பார்வை பார்த்தவன் எதையோ தேடினான். ஆழ்வார்கள் நடுவே, ஸ்தலத்தார் நடுவே, கைங்கர்ய பரர்கள் நடுவே என அவனது கண்கள் சுழன்று தேடியது. சிவந்த தாமரையில் கருவண்டு வட்டமிடுவது போன்று விரிந்த இமைகளுக்குள் கருவிழிகள் வட்டமிட்டன.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

எதையோ தேடித்தேடி களைத்த அவனது கண்கள் தேடியது கிடைக்காத காரணத்தால் சோர்ந்து வாடி மெலிதாக மூடியது. “மறையும் சூரியனைக்கண்டு மலர்ந்த தாமரை இதழ் மூடுமே” அஃதே போன்று மறைமுடியின் பொருளான ரங்கனின் முகம் வாட்டமுற்றது.

உலகமே உற்சாகத்திலுள்ள பொழுதில் உவகையின்றி நாயகன் வாடுவது கண்டு நம்மாழ்வார் திகைத்தார். ஆழ்வார்கள் ஒருத்தர்க்கொருத்தர் பார்த்துக்கொண்டனர். எவருக்கும் எதுவும் புரியவில்லை. நம்மாழ்வாரின் கண்ணசைவைக் கண்ட கலியன் ராமானுஜருக்கு கட்டளையிட்டார். குறிப்பறிந்த ராமானுஜர் குணங்களின் வள்ளலின் அருகே சென்றார்.

“ஹே ரங்கநாதா! தங்களின் திருமுக மண்டலம் வாடியுள்ளதே! ஏனோ!” எனக்கேட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கத்யத்ரயத்தில் ராமானுஜருடன் பேசிய அரங்கன் தன் மவுனம் கலைத்து மனக்குமுறலை வெளியிட்டான். அரங்கனின் அந்தரங்கம் இப்போது அரங்கேறுகிறது.
——- அரங்கன் பேசுவான்.
(காத்திருங்கள்… தொடரும்)

  இப்படிக்கு,
ஶ்ரீAPN ஸ்வாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories