December 5, 2025, 4:21 PM
27.9 C
Chennai

கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள் | Sri #APNSwami #Writes

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 4 - 2025

விளம்பி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள்

      ????????????????????????????????????????????????

     உலகெங்கும் மகர சங்கராந்தி – உத்தராயண புண்யகாலம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆன்மீக வாதிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விவசாயப் பெருமக்களுக்கு இதொரு மகிழ்ச்சியான நன்னாள். விவசாயம் இல்லை என்றால் உலகில் உயிரினங்களுக்கு உணவு ஏது ?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”
என்கிறார் திருவள்ளுவர். ஆடிப்பட்டம் தேடி விதைத்து, தையில் நல்ல அறுவடை செய்து மகிழ்ச்சியுடன் உழவர் திருநாளை கொண்டாடுகின்றனர் விவசாய மக்கள்.

    ஸம்ஸ்க்ருதத்தில் வ்யவஸாயம் – விவசாயம் – என்றால் முயற்சி. அதாவது சோர்ந்து போகாமல் காரியங்களைச் செய்து வெற்றியடைபவர்களே விவசாயர்கள் என்பர். சமனில்லாத பூமியை உழுது, சீர்படுத்தி, ஆழப்படுத்தி, விதை விதைத்து, தண்ணீர் தேக்கி, நாற்று நட்டு, களை பறித்து, பயிரினைக் காத்து, முடிவில் அறுவடை செய்கின்றனர் விவசாயிகள்.

     இவ்வளவு பாடுபட்டு பயிரிட்டதைக் காப்பாற்ற ஒரு விவசாயி தனது நிலத்திலேயே தங்குவான். அறுவடை வரையிலும் வீட்டிற்குச் செல்ல மாட்டான். ஆடுகள், மாடுகள், பறவைகள், திருடர்கள், ஏனைய விலங்குகள் பயிரிட்டதைக் கெடுக்காதவண்ணம் காப்பது அவனது கடமை. அப்போது தானே மகசூல் (லாபம்) அடைய முடியும். தனது வயல் வெளியின் எல்லைகள் கண்ணுக்குத் தெரியும் வரை ஒரு உயர்ந்த பரணை(Loft) அமைத்து, அதிலேயே தான் வசித்துக்கொண்டு, கண்ணும் கருத்துமாக காவல் இருப்பான்.

ஸ்வாமி தேசிகன் உழவர் திருநாள் செய்தி ஒன்றை அளிக்கிறார் கேளுங்கள்.

     ஸ்ரீநிவாசன் என்னும் நாராயணன் ஒரு விவசாயி. அவன் பரமபதமாகிய தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, வயல் வெளியாகிய பூமிக்கு(அவதாரம்) வருகிறான். இந்த பூமியில் “சரணாகதி” என்னும் விதை விதைத்து அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறான்.

     அதாவது விதை விதைத்து விட்டு வீட்டிற்கு(பரமபதம்) செல்லாமல் இங்கேயே (பூமியிலேயே) ஏழுமலைகள் என்னும் பெரிய பரணை (Loft) மீது நின்றுக் கொண்டு தான் இட்ட பயிரினைக் காவல் காக்கிறான். பயிரினைக் காப்பாற்ற களையெடுப்பது போன்று, அசுரர், நாஸ்திகர், வேதத்திற்கு பொய் அர்த்தம் சொல்பவர் முதலான களைகளை எடுத்து ரட்சிக்கிறான். ஒருவழியாக சரணாகதிப்பயிர் முளைவிட்டு, கிளை செழித்து, பால் பிடித்து, கதிர்கள் சீரார் செந்நெல்களாகத் திகழ்கின்றன.

     சரணாகதி சாஸ்திரத்தை நன்குணர்ந்து அனைவரும் மோக்ஷமடைய வேண்டும் என்னும் ஆவலில், விதை விதைத்த விவசாயி போன்று பெருமாள் திருமலையில் எப்பொழுதும் நிற்கிறான்.

     இது உத்திராயண புண்ய காலம். அதாவது மோட்சமடையும் ஜீவன் உத்தராயண வாசல் வழியாக அர்ச்சிராதி (மோட்சமென்னும் வழி) வழியாக பரமபதம் செல்கிறான். நரகமடையும் ஜீவன் தூமாதி(புகை) தட்சிணாயன வாசல் வழியாக நரகம் செல்கிறான். போகியன்று புகைமூட்டமான தூமாதி மார்கம் விலகி உத்தராயண வாசல் திறந்து, திருவேங்கடமுடையான் கருணை என்னும் மகிழ்ச்சிப்பெருக்கு நமக்குக் கிடைத்திடும் நல்லதொரு காலம் இது.

     சரணாகதி செய்த ஜீவர்களாகிய தான்யங்களைப் பெறும்(மகசூல்) ஸ்ரீனிவாசன் என்னும் விவசாயி மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். தனது இயற்கை(வேதம்) விவசாயம் பலித்ததே என கொண்டாடுகிறான்.

ஸ்வாமி தேசிகனின் தயா சதகம் – 21
              ஸமயோபநதைஸ் தவ ப்ரவாஹை:
              அநுகம்பே க்ருத ஸம்ப்லவா தரித்ரீ |
              சரணாகத ஸஸ்ய மாலிநீயம்
             வ்ருஷசைலேச க்ருஷிவலம் திநோதி ||

     நாமும் தேசிகன் வழியில் உழவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

அன்புடன்
ஏ.பி.என் ஸ்வாமி
Sri #APNSwami

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க… https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான் ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/ மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories