காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 119

gandhi murder politics1 - 2026

திகம்பர் பாட்கே பழைய டெல்லி ரயில் நிலையத்திலிருந்த அதே நேரத்தில் வேறொரு ப்ளாட்ஃபார்மில் ஆப்தேயும் நாதுராமும் இருந்தனர்.இது பாட்கேயிற்கு தெரியாது.

கான்பூர் செல்லும் அந்த இரவு வண்டியில் முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் அவர்கள் பயணித்தனர்.

பாட்கேயின் ரயில் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்து ,இவர்களின் ரயில் புறப்பட்டது.

இவர்கள் இருந்தது நான்கு ஸ்லீப்பர் கொண்ட உறங்கும் கம்பார்ட்மெண்ட்.

அங்கு இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை.

ஆகவே இருவரும் மனம் விட்டு பேச முடிந்தது.

இது பற்றி பின்னாளில் ஆப்தே கார்கரேயிடம் நினைவுகூர்ந்தார்.

‘’ காந்தியை கொல்லும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி எங்கள் மனதை பாதிக்கத்தான் செய்தது ;

ஆனால் எங்கள் உறுதியான தீர்மானத்தை விட்டு விடவில்லை ; எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு–எங்கள் தொழிலுக்கோ,குடும்ப வாழ்க்கைக்கோ திரும்புவது என்பது இனி நடக்கப்போவதில்லை எனத் தீர்மானித்தோம்.

இந்த நிலையில் காந்தியை கொல்லும் முயற்சியை கைவிடுவது எனும் பேச்சிற்கே இடமில்லை ; அது சாத்தியமும் இல்லை ; இன்னொரு முறை முயற்சிக்கலாம் ; வேறு சில ஆட்களை திரட்டலாம் ; நிதி திரட்டலாம்.ஆனால் இதனை மொத்தமாக கைவிடுவதென்பது முடியாது ’’.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

நாதுராம் அதிகம் பேசவில்லை.

ஆனால் நான் கூறியதை நாதுராம் முழுமையாக ஏற்கவில்லை என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

அடுத்த நாள் காலையில்தான் அவரின் எண்ண ஓட்டம் என்னவென்பது எனக்குத் தெரிய வந்தது.

நள்ளிரவு கடந்த நிலையில்,நான் அப்படியே உறங்கிப்போனேன்.

சற்றே அமைதிகுலைந்த தூக்கம்தான்.

காலையில் 6 மணி இருக்கலாம்.

பாதி உறக்கத்தில் இருந்தேன்.

‘’ நானா ( ஆப்தேயை அப்படித்தான் நாதுராம் அழைப்பது வழக்கம் ) நன்றாக உறங்கினாயா ? ‘’

நான் ஏதோ முணுமுணுத்தேன்.சற்றே சோம்பலை முறித்துக்கொண்டு தூக்கத்திலேயே பதிலளித்தேன் .

’’ம்..நீ ? ‘’

என் கேள்விக்கு நாதுராம் பதிலளிக்கவில்லை.

அதற்கு பதிலாக அவன் கூறினான் :

‘’ இதை நான் செய்யப்போகிறேன்.எனக்கு எந்த உதவியும் தேவையில்லை.யாருடைய உதவியும் தேவையில்லை.யாரையும் புதிதாகச் சேர்த்து கொள்ளப்போவதும் இல்லை ; யாரை நம்பியும் இறங்கப்போவதில்லை ‘’.

என் கண்கள் இன்னும் மூடியே இருந்தன.ஆனால் நான் சத்தியமாகச் சொல்கிறேன் ,அந்த கணத்தில் காந்தி இறந்துவிட்டதாக நான் உணர்ந்தேன் ‘’.

( தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories