“மணப்பெண் வராமல் பெற்றோர் பெரியவாளிடம் ஆசி”

“மணப்பெண் வராமல் பெற்றோர் பெரியவாளிடம் ஆசி”
 
(“கொழந்தைக்குக் கையில, காலில மருதாணி இட்டாச்சாக்கும்!”-பெரியவா) (உலக விவகாரம் நுணுக்கமாகத் ‘தெரிந்து கொண்டு’ சொன்னதிலேயே அக்குடும்பத்தினரின் நெஞ்சு நனைகிறது).
 
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து17352237 1601442589873347 7280143330772355007 n 2 - 2026
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
‘லோக ஜனங்களின் ஸகல வியவஹாரங்களும்
தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு’ கீதாசாரியன்
போலவே நமது ஆசாரியன் இருந்ததற்கு ஓர்
உதாரணமாவது காட்டாது விட்டால் நியாயமாகாது.
 
அவரிடம் மிகுந்த பக்தி பூண்ட ஒரு குடும்பத்தினர்
தங்களகத்துப் பெண்ணுக்குக் காஞ்சியிலேயே
கலியாண மண்டபம் எடுத்துக் கொண்டு மணமுடிக்க
வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்தது முகூர்த்த
நாளுக்கு இரு தினம் முந்தைய மாலையில்தான்.
அன்றிரவு ஸ்ரீசரணரது தரிசனத்திற்காக வருகிறார்கள்.
 
அவர்களில் நிகழ்ச்சி நாயகியான மணப்பெண்
இல்லாதது அவரோடிருக்கும் பாரிஷதர்களுக்குப்
பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.அதுவும் அப்பெண், குழந்தைப் பருவத்திலிருந்தே அவரிடம் பரம பக்தி கொண்டவளாயிற்றே!
 
குறிப்பறியும் ‘இங்கிதக்ஞர்’ அவர்களுக்குப்
பதிலளிக்கும் ‘லீடிங் கொஸ்சன்’ போலவே
அக்குடும்பத்தினரிடம் கேட்கிறார்;
 
“கொழந்தைக்குக் கையில, காலில மருதாணி
இட்டாச்சாக்கும்!”
 
‘ஸகல வியவஹாரங்களும் தெரிந்து கொண்டி’ருப்பதில் பின்னரும் தொடர்கிறார்;
 
“நாளைக் காலம்பறவே ஸம்பந்திப் பேர்கள்
வந்துடறளாக்கும்! அவா ஊர்லேந்து அப்படித்தானே
ரயில்,பஸ் கனெக்’ஷன் இருக்கு? அப்பறம் ஸமாராதனை இருக்கும். அது ஆனவிட்டு இங்கே நான் விச்ராந்தி பண்ணிக்கிற டயம் ஆயிடும்.அதுக்கப்புறம் ஒங்களுக்கு ஜானுவாஸ கார்யம் வந்துடும்.ஆனதுனால கொழந்தை இல்லாவிட்டாலும் பரவாயில்லேன்னு இப்பவே வந்துட்டேளாக்கும்.”
 
இவ்வாறு அவர் உலக விவகாரம் நுணுக்கமாகத் ‘தெரிந்து கொண்டு’ சொன்னதிலேயே அக்குடும்பத்தினரின் நெஞ்சு நனைகிறது. மேலும் அவர் ‘புரிந்து கொண்டு’ என்பதாகம் அனுதாபக் கருணையுடன் கூறியதைக் கேட்டபோதோ,நனைந்த நெஞ்சங்கள் உருகியே ஓடுகின்றன,
 
“வரமுடியலையே-னு கொழந்தை கொஞ்சங்கூட
வருத்தப்பட வேண்டாம்.எல்லாம் நல்லதுக்குத்தான்.
வந்திருந்தா கூட அவளை இத்தனை
கவனிச்சிருப்பேனான்னு ஸந்தேஹந்தான்! இப்பத்தான், வந்திருக்கிற ஒங்களையெல்லாம்விட வராத அவளோட நெனப்பே ஜாஸ்தியாயிருக்கு .ஜாஸ்தியாகவே ஆசீர்வாதம் பண்றேன்’னு நான் சொன்னதா அவகிட்டச் சொல்லுங்கோ.
 
போனதடவை அவளை நீங்க அழைச்சுண்டு வந்து
சீக்கிரமா கல்யாணம் ஆகணும்ணு ரொம்ப
ப்ரார்த்திக்கிறப்ப, ‘அடுத்த தடவை ஜோடியா
அழைச்சுண்டுவராப்பல, அம்பாள் அனுக்ரஹம்
பண்ணட்டும்’னு நானும் ப்ரார்த்திச்சுண்டேன் .அதுதான் இப்ப அவ தம்பதியாகவே வரும்படியா ஆயிருக்கு-ன்னு சொன்னேன்னும் சொல்லுங்கோ!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories