“மணப்பெண் வராமல் பெற்றோர் பெரியவாளிடம் ஆசி”

“மணப்பெண் வராமல் பெற்றோர் பெரியவாளிடம் ஆசி”
 
(“கொழந்தைக்குக் கையில, காலில மருதாணி இட்டாச்சாக்கும்!”-பெரியவா) (உலக விவகாரம் நுணுக்கமாகத் ‘தெரிந்து கொண்டு’ சொன்னதிலேயே அக்குடும்பத்தினரின் நெஞ்சு நனைகிறது).
 
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து17352237 1601442589873347 7280143330772355007 n 2 - 2026
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
‘லோக ஜனங்களின் ஸகல வியவஹாரங்களும்
தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு’ கீதாசாரியன்
போலவே நமது ஆசாரியன் இருந்ததற்கு ஓர்
உதாரணமாவது காட்டாது விட்டால் நியாயமாகாது.
 
அவரிடம் மிகுந்த பக்தி பூண்ட ஒரு குடும்பத்தினர்
தங்களகத்துப் பெண்ணுக்குக் காஞ்சியிலேயே
கலியாண மண்டபம் எடுத்துக் கொண்டு மணமுடிக்க
வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்தது முகூர்த்த
நாளுக்கு இரு தினம் முந்தைய மாலையில்தான்.
அன்றிரவு ஸ்ரீசரணரது தரிசனத்திற்காக வருகிறார்கள்.
 
அவர்களில் நிகழ்ச்சி நாயகியான மணப்பெண்
இல்லாதது அவரோடிருக்கும் பாரிஷதர்களுக்குப்
பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.அதுவும் அப்பெண், குழந்தைப் பருவத்திலிருந்தே அவரிடம் பரம பக்தி கொண்டவளாயிற்றே!
 
குறிப்பறியும் ‘இங்கிதக்ஞர்’ அவர்களுக்குப்
பதிலளிக்கும் ‘லீடிங் கொஸ்சன்’ போலவே
அக்குடும்பத்தினரிடம் கேட்கிறார்;
 
“கொழந்தைக்குக் கையில, காலில மருதாணி
இட்டாச்சாக்கும்!”
 
‘ஸகல வியவஹாரங்களும் தெரிந்து கொண்டி’ருப்பதில் பின்னரும் தொடர்கிறார்;
 
“நாளைக் காலம்பறவே ஸம்பந்திப் பேர்கள்
வந்துடறளாக்கும்! அவா ஊர்லேந்து அப்படித்தானே
ரயில்,பஸ் கனெக்’ஷன் இருக்கு? அப்பறம் ஸமாராதனை இருக்கும். அது ஆனவிட்டு இங்கே நான் விச்ராந்தி பண்ணிக்கிற டயம் ஆயிடும்.அதுக்கப்புறம் ஒங்களுக்கு ஜானுவாஸ கார்யம் வந்துடும்.ஆனதுனால கொழந்தை இல்லாவிட்டாலும் பரவாயில்லேன்னு இப்பவே வந்துட்டேளாக்கும்.”
 
இவ்வாறு அவர் உலக விவகாரம் நுணுக்கமாகத் ‘தெரிந்து கொண்டு’ சொன்னதிலேயே அக்குடும்பத்தினரின் நெஞ்சு நனைகிறது. மேலும் அவர் ‘புரிந்து கொண்டு’ என்பதாகம் அனுதாபக் கருணையுடன் கூறியதைக் கேட்டபோதோ,நனைந்த நெஞ்சங்கள் உருகியே ஓடுகின்றன,
 
“வரமுடியலையே-னு கொழந்தை கொஞ்சங்கூட
வருத்தப்பட வேண்டாம்.எல்லாம் நல்லதுக்குத்தான்.
வந்திருந்தா கூட அவளை இத்தனை
கவனிச்சிருப்பேனான்னு ஸந்தேஹந்தான்! இப்பத்தான், வந்திருக்கிற ஒங்களையெல்லாம்விட வராத அவளோட நெனப்பே ஜாஸ்தியாயிருக்கு .ஜாஸ்தியாகவே ஆசீர்வாதம் பண்றேன்’னு நான் சொன்னதா அவகிட்டச் சொல்லுங்கோ.
 
போனதடவை அவளை நீங்க அழைச்சுண்டு வந்து
சீக்கிரமா கல்யாணம் ஆகணும்ணு ரொம்ப
ப்ரார்த்திக்கிறப்ப, ‘அடுத்த தடவை ஜோடியா
அழைச்சுண்டுவராப்பல, அம்பாள் அனுக்ரஹம்
பண்ணட்டும்’னு நானும் ப்ரார்த்திச்சுண்டேன் .அதுதான் இப்ப அவ தம்பதியாகவே வரும்படியா ஆயிருக்கு-ன்னு சொன்னேன்னும் சொல்லுங்கோ!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories