December 5, 2025, 4:17 PM
27.9 C
Chennai

“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.

“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.

(என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே, என்னைப் பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம, முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக் காப்பாத்தியிருக்கேளே)

சொன்னவர்-ஸ்ரீகண்டன்.(தொண்டர்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் 26166313 1816465295065294 7928481458032824548 n 2 - 2025
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

பரமாசார்யா எங்கே போனாலும் அவர் கூடவே ஸ்ரீகண்டனும் போவாராம்.ஒரு சமயம் ஏதோ காரணத்தால வெளீல போயிருந்த ஸ்ரீகண்டன் மடத்துக்கு வர்றதுக்குள்ளே பெரியவா எங்கேயோ புறப்பட்டுப் போயிட்டாராம்.

‘பெரியவா கூட போகமுடியாம போச்சே… பெரியவா என்னை விட்டுட்டுப் போயிட்டேளே, எப்பவும் கூடவர்ற நான் இப்போ வரலையே, என்னோட நினைப்பே உங்களுக்கு கிடையா’தாங்கற மாதிரி மனசுக்கு தோணினதையெல்லாம் நினைச்சுண்டு மடத்துல ஒரு அறையில் உட்கார்ந்து திருகையில மாவரைச்சுண்டு இருந்தாராம்.

அந்த சமயத்துல மடத்துல இருந்து ஒருத்தர் வேர்க்க விறுவிறுக்க ஒடிவந்து, “நீ என்ன வேலை பண்ணிண்டு இருந்தாலும்,அதை அப்படியே போட்டுட்டு,உடனடியா உன்னைக் கூட்டிண்டு வரச்சொன்னா பெரியவா!” அப்படின்னு சொன்னாராம்.

மாவு படிஞ்சிருக்கற கையை அலம்பிக்கலாம்னு போனவரைக்கூட,”அதெல்லாம் பரவாயில்லை உடனே வா!”ன்னு வெளியில் அழைச்சுண்டு வந்தாராம் வந்தவர்.

அவா அந்த அறையை விட்டு வெளீல வந்த மறு நிமிஷம், ஸ்ரீகண்டன் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப்பக்கத்துல இருந்த தூண் சரிஞ்சு, அந்தக் கட்டடம் அப்படியே நொறுங்கி சாய்ஞ்சுதாம்.ஒரு விநாடி தாமதிச்சிருந்தாலும் என்ன ஆகியிருக்கும்கறதை நினைச்சு ஸ்ரீகண்டன் அப்படியே விக்கிச்சுப்போய்
நின்னாராம்.

என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே, என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம, முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக்
காப்பாத்தியிருக்கேளே,பெரியவா என்னை மன்னிக்கணும்னு, அந்த ஞானிமுன்னால படபடக்கப்போய் அவர் நின்னதும், அமைதியா ஒரு புன்னகை மட்டும் பண்ணினாராம் பரமாசார்யா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories