உண்மையை உணர்த்தும் உன்னத பாரதம் !

Published:

mahabharatham - 2026மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்….**

மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்

– சாந்தனுவாய்….

சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்

– கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்

– பாண்டுவாய்….

வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்

– சகுனியாய்…

ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு

– குந்தியாய்…

குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்

– திருதராஷ்டிரனாய்….

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்

– கௌரவர்கள்…

பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே

– துரியோதனனாய்…

கூடா நட்பு, கேடாய் முடியும்

– கர்ணனாய்…

சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்

– பாஞ்சாலியாய்..

தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்

– யுதிஷ்டிரனாய்…..

பலம் மட்டுமே, பலன் தராது

– பீமனாய்….

இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே

– அர்ஜூனனாய்….

சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது

– சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

– அபிமன்யூவாய்….

நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
– கண்ணனாய்…

Related articles

Recent articles

spot_img