மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்….**
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
– சாந்தனுவாய்….
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
– கங்கை மைந்தானாய்..
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
– பாண்டுவாய்….
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
– சகுனியாய்…
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
– குந்தியாய்…
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
– திருதராஷ்டிரனாய்….
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
– கௌரவர்கள்…
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
– துரியோதனனாய்…
கூடா நட்பு, கேடாய் முடியும்
– கர்ணனாய்…
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
– பாஞ்சாலியாய்..
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
– யுதிஷ்டிரனாய்…..
பலம் மட்டுமே, பலன் தராது
– பீமனாய்….
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
– அர்ஜூனனாய்….
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
– சகாதேவனாய்..
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
– அபிமன்யூவாய்….
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
– கண்ணனாய்…