December 5, 2025, 5:07 PM
27.9 C
Chennai

“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”

“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”

(என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்…ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு
சொல்லுவேளோன்னு… பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!… சம்பிரதாய
விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள்…. “வைஷ்ணவ சம்பிரதாயத்தைச்
சேர்ந்த ஓர் அம்மையார்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஓர் அம்மையார் தரிசனத்துக்கு வந்தாள். அவர்கள்
மரபுப்படி சேவித்து விட்டு நின்றாள்.

அதிகக் கூட்டமில்லாத நேரம்.

அம்மாளின் கண்களில் ஓர் ஏக்கம்,ஆவல்,எதிர்பார்ப்பு, நம்பிக்கை – எல்லாம்
தெரிந்தன.

குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள், வியாதி வெக்கை. ஒரு பெண்ணுக்குக்
கல்யாணமாகி ஏழெட்டு வருஷமாகியும் குழந்தைகள் இல்லை. இன்னொரு பெண்ணுக்கு வயது
எகிறிக் கொண்டே போகிறது.சரியான வரன் கிடைக்கவில்லை!பையனுக்கு படிப்பு
வரவில்லை. பணக் கஷ்டம், இன்னும் என்னென்னவோ…..கேரளா சென்று நம்பூதிரியிடம்
பிரச்னம் பார்த்தாள். பித்ரு தோஷமாம். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய
கர்மாக்களை ஒழுங்காகச் செய்ய வில்லையாம். ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணுமாம்.

வைஷ்ணவ மரபுப் பிரகாரம், ராமேஸ்வர யாத்திரை, பரிகாரச் சடங்குகள் செய்வது
வழக்கமில்லை.

“என்ன செய்யறதுன்னே தெரியல்லே. சம்பிரதாயத்தை மீற முடியல்லே, கஷ்டமோ தீரணும்.
பெரியவா தான் வழி காட்டணும்” என்று பவ்யமாகச் சொன்னாள் அம்மாள்.

“நீங்கள் தென்கலையா?” என்று பெரியவா கேட்டார்கள்.

“ஆமாம்”

“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு என்ற மூன்றும் தென்கலையார்களுக்குக்
கிடையாது…”

“உப்புச்சார்,சாணிச்சார்,சடைச்சார்-னு எங்க அம்மா சொல்லுவா..”

“அதே தான்!
ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம் -உப்புச்சார்,
பஞ்சகவ்ய ப்ராசனம்- சாணிச்சார்,
கங்கா ஸ்நானம் – சடைச்சார்.(பரமசிவனின் சடையிலிருந்து வெளிப்பட்டதால்);

அதனாலே, சம்பிரதாய விரோதமாக ராமேஸ்வரம் போக வேண்டாம்.

1.நித்தியம் சாளக்ராமம் (பெருமாள்) திருவாராதனம் செய்து, திருமஞ்சன தீர்த்தம்
சாப்பிடணும்.

2. ஏகாதசியன்று உபவாசம். பால்,பழம்,கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு உங்கள்
வீட்டுக்காரர் பன்னிரண்டு திருமண்இ ட்டுக்கொண்டு திருவாராதனம் செய்யணும்.
மறுநாள் துவாதசியன்னிக்கு சீக்கிரமாகவே திருவாராதனம் செய்து, துளசி தீர்த்தம்
சாப்பிட்டுவிட்டுப் பாரணை செய்யணும்.

3. தினமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி அளவு புல் தரணும்.

இப்படியெல்லாம் செய்தால், சர்வப் பிராயச்சித்தம் செய்ததாகும்”

பெரியவா மெள்ள மெள்ள வார்த்தைகளைக் கூறி உபதேசத்தைமுடித்தபோது, அந்த அம்மாள்
உதடுகளை மடித்து,அழுகையை அடக்கிக் கொண்டு கண்கள் பனிக்க நின்றாள்.

“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு. என்னமோ நினைச்சு
குழம்பிண்டிருந்தேன்… ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேளோன்னு…
பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!… சம்பிரதாய விரோதமில்லாதபடி ஒரு
நல்ல வழி காட்டியிருக்கேள்….”

பிரசாதம் பெற்றுக்கொண்டு அந்த அம்மாள் சென்றபோது,அவர் முகம் ஸ்படிகம் போல்
இருந்தது. தெளிவாக, மிகத் தெளிவாக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories