“பெரியவாளின் கூட்டு ரெசிபி”

Published:

‘எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும், உபநிஷத் பேசினா, எனக்கு என்ன புரியும்!..” “பெரியவாளின் கூட்டு ரெசிபி” சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள்.11054482_924033570960760_4881393388095922503_n தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருக்கா பெரியவா! (என்ன,அப்படிக் கண்ணை முழிச்சுப் பார்க்கிறேள்? பெரியவா, எப்போ சமையல் கட்டுக்குப் போயிருக்கான்னு தானே? பொஸ்தகம் படிக்காமலே அவாளுக்கு எல்லாம் ஸ்புரிக்கும்.) “கூட்டு செய்யத் தெரியுமோ”ன்னு ஒரு நாள் கேட்டா. தெரியாதுன்னேன். “நான் சொல்றபடி செய்யி.கூட்டு மிச்சமே இருக்காது..” “ஜலம் வெச்சு பயத்தம் பருப்புப் போடு. ..கொஞ்சம் வெந்தவுடனே, காயைப் போடு, ..நன்னா வெந்தப்புறம் கடலைப் பருப்பு, கொத்தமல்லி விதை,தேங்கா அறைச்சு விடு, ..மொளகு சீரகம் போடு, ..இப்படிப் பண்ணினா, கூட்டு மிச்சமே இருக்காது..” பெரியவா சொன்னபடியே பண்ணுவேன். அப்போ கூட இருந்த யதிதிகளும் சாப்பிடுவா, கூட்டு முழுக்க ஆயிடும். ‘எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும், உபநிஷத் பேசினா, எனக்கு என்ன புரியும்!..

Related articles

Recent articles

spot_img