“பெரியவர் உகுத்த கண்ணீர்”

“பெரியவர் உகுத்த கண்ணீர்” 43914115 666584667076087 6785034429593251872 n - 2026

( மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாயின் சந்தேகத்திற்கு. -விளக்கம் அளித்த பெரியவா)

நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்
-ரா. கணபதி தினமணியில் வந்த பழைய கட்டுரை.

1957-இல் நவராத்திரி விழாவின்போது சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு காஞ்சி மஹாஸ்வாமிகள் வந்திருந்தார்கள். அப்போது புத்திர சோகத்தால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்மணி பெரியவரைச் சந்தித்து அழுதார்கள். மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாய்க்குச் சந்தேகம்.

இல்லையென்றால் அவன் சாந்திக்குப் பெரியவர் அருள வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். “அந்த சாந்தி, இந்த ஹோமம் என்று பலரும் குழப்புகின்றனர். பெரியவர் வாயால நிஜமான பரிஹாரம் சொல்லணும். அவன் பேயாகத் திரியாமல் பெரியவா காப்பாத்தணும். ” அழுகைக்கு இடையே அந்த அம்மையார் சொன்னார்.

ஒரு நிமிடம் கண்ணை மூடித் தியானித்தார் பெரியவர். “ஒன்றும் செய்ய வேண்டாம். கிராமத்துப் பண்ணையாட்கள் வேலை செய்யறாங்க இல்ல, வேலையின் போது அவங்க தொண்டைக்கு இதமா நீர் மோர் கொடுக்க ஏற்பாடு செய். தவிக்கிற குழந்தை சாந்தி ஆகிடுவான். புண்ணியமும் கிடைக்கும். நீயும் நிம்மதியா இருப்பே’ என்றார்.

சாஸ்திரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பெரியவர் வாயிலிருந்து இது வந்தது ஆச்சரியம். சுற்றியிருந்த பக்தர்களுக்கு மேலும் திடுக்கிட வைக்கும் ஒரு காட்சியும் அங்கே அரங்கேறியது. பெரியவர் மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்தார்கள்.

“The tears of saints more sweet by far
Than all the songs of sinners are’
-கவி ஹெர்ரிக்

பெரியவாளை நமஸ்கரித்த அந்த அம்மாள் எழுந்து பெரியவாளை ஏறிட்டுப் பார்த்து அச்சத்துடன் “அடடா, என் பாரம் போயிடுதுன்னு சந்தோஷப்பட்டேன். இப்ப பெரியவா மனசைக் கஷ்டப்படுத்திட்டேன் போல இருக்கு” என்று புலம்பினார்கள்.

“அதெல்லாம் இல்லை. பெரியவாளுக்கு மனசும் இல்லை. கஷ்டமும் இல்லை ” பிரசாதத் தட்டை நகர்த்திச் சிரித்தபடியே சொன்னார் மஹா ஸ்வாமிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories