February 6, 2025, 7:27 PM
28.1 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி -5: புலம்பின புட்களும்… (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி

விளக்கம்: வேதா டி. ஸ்ரீதரன்

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகடலரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடுசெய் கோயில்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே. (5)

பொருள்

மலர்த் தோட்டங்களில் உறங்கிக் கொண்டிருந்த பறவை இனங்கள் துயில் எழுந்து கீச்சிடத் தொடங்கின. இரவு கழிந்தது. காலை மலர்ந்தது. கீழ்த்திசைக் கடலின் அலையோசை எங்கும் வியாபித்தது. தேன் வண்டுகளின் ஆனந்த கோஷத்தில் சொக்கி நின்ற பலவித மலர்களையும் துளசியையும் தொடுத்து உருவாக்கப்பட்ட அழகிய மாலைகளுடன் வந்திறங்கிய தேவர்கள் உன் அடி தொழுவதற்காகக் காத்திருக்கின்றனர். லங்கேசனாகிய விபீஷணனால் தொழப்படுபவனே, எம் இறைவனே, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்

பொழில் – சோலை

புட்கள் – புள் இனங்கள் (பறவைகள்)

கங்குல் – இரவு

புலரி – காலை

களிவண்டு – தேன் குடித்த ஆனந்தத்தில் உள்ள வண்டு

மிழற்றிய – இசைத்த

கலம்பகம் புனைந்த – பலவித மலர்களால் தொடுக்கப்பட்ட

அலங்கல் – மாலை, துளசி

தொடையல் – மாலை

மொழி அழகு

கலம்பகம் என்பது ஒருவகை இலக்கியத்தையும் குறிக்கும். எனவே, களி வண்டு மிழற்றிய என்பதை உருவகமாகக் கொண்டு, ‘தேன் குடித்த வண்டுகள் செய்த ரீங்காரத்தைப் போல பக்திக் களிப்பில் எழுந்த பாக்களால் தொடுக்கப்பட்ட பாமாலை’ என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே, இந்த வரிகளை, ‘பக்திக் களிப்புடன் தொடுக்கப்பட்ட பூக்களுடன் கூடிய துளசி மாலை’ என்றோ, ‘பக்தியுடன் செய்யப்பட்ட பாமாலை, துளசி மாலை ஆகிய இரண்டும்’ என்றோ பொருள் கொள்ளவும் இடமுண்டு. அமரர்கள் என்பது இறவாப் புகழ்பெற்ற அடியார்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

Topics

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

பஞ்சாங்கம் பிப்.04- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

Entertainment News

Popular Categories