December 7, 2025, 5:59 PM
27.9 C
Chennai

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட பாட்டி..

500x300 1838222 5 - 2025

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 90 வயது பாட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதலியார் பட்டி தெருவில் உள்ளது பத்திரகாளியம்மன் கோவில். இங்கு கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .

இதில் மகா சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற சுமார் 90 வயது பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இதற்கு முன்பு, வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.

தொடர்ந்து முத்தம்மாள் பாட்டி கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார். இதில் 40 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்து பின்னர் வெறும் கையில் அப்பம் சுடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். முன்னதாக பாசிப்பயறு, தட்டாம் பயறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை பெண்கள் நேர்த்தி கடனாக தயார் செய்து கொடுக்கின்றனர்.

கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு சிவராத்திரி நாளில் பக்தர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காகவும், மகா சிவராத்திரி வழிபாடு செய்வதற்காகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories