December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

செங்கல்பட்டு அருகே சதுர் ராம தரிசனம்!

சதுர் ராம தர்சனம்!
 
முதலில் பொன்பதர்கூடம் – சதுர்புஜ ராமர். ஸ்ரீ ராமரின் அமர்ந்த கோலம். நான்கு கரங்களுடன் சங்கு சக்ர தாரியாக வரம் தரும் கரம் கொண்டவனாக… உத்ஸவர் மூர்த்தி வெகு அழகு. கைரேகைகளும், விரல் நகமும் பாதம், கணுக்கால் எல்லாம் அவ்வளவு நுணுக்கமாக காட்சி தரும் அழகு! அதைவிட அழகு.. அனுமனின் உத்ஸவ மூலவர் திருமேனிகள். வலக் கரத்தை வாயினில் பொத்தி அடியேன் என்று வளைந்து குனிந்து பணிந்து, விநய ஆஞ்சநேயராக அற்புதக் கோலம்…!
 
அடுத்து, பொன்விளைந்த களத்தூர் – நரஸிம்ம ஸ்வாமி கோயில் அடுத்துள்ள கோதண்ட ராமர் சந்நிதி. சீதா தேவியை மடியில் அமர்த்தி வைத்த கோலத்தில் ராமன்.! லட்சுமணன் கைகூப்பிய வணக்கக் கோலம்.
 
அந்த சந்நிதியை அடுத்துள்ள தர்ப்ப சயன ராமரின் அழகுக் கோலம். சேலம் விஜயராகவாச்சாரியார், தொடர்ந்து அவர் குடும்பம் செய்துள்ள கைங்கர்யம் போற்றப்பட வேண்டியது. உத்ஸவ மூர்த்தியின் அழகு அவ்வளவு அத்புதம். அருகிருந்த கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, தனிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.
 
அடுத்து, செங்கல்பட்டில் உள்ள கோதண்டராம ஸ்வாமி. ஒரே பீடத்தில் ராமனும் சீதையும். அருகே பிராகாரத்தில் அனுமன் சந்நிதி. சனியை அடக்கிய அனுமன் எனும் கோலம். காஞ்சி மகாபெரியவர் காட்டிக் கொடுத்த விக்ரஹ ரூபி.
 
சென்னையில் இருந்து வருபவர்கள், இந்த நான்கு ராமர்களையும் தரிசிக்க அருமையான வாய்ப்பு. மாலை 3 மணிக்கு மேல் கிளம்புங்கள். செங்கல்பட்டு வந்து, திருச்சி செல்லும் சாலையில் சற்று தொலைவு வந்து, நீதிமன்ற வளாகம் கடந்ததும் வரும் இடதுபுற சாலையில் திரும்பி 7 கி.மீ. தொலைவு…. ஒத்திவாக்கம் ரயில்வே நிலைய கேட் கடந்ததும் வரும் வலதுபுறம்… பொன்விளைந்த களத்தூர். இருப்பினும் சரியாக 5-5.30 மணி அளவில் (அப்போதுதான் திருவாராதனம் செய்ய கைங்கர்யபரர் வருவார்) அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் பொன்பதர் கூடம் சென்று சதுர்புஜ ராமரை தரிசித்து விட்டு, அதன் பின் பொன்விளைந்தகளத்தூரில் இரு ராமர்களையும் தரிசித்து பின் செங்கல்பட்டு வந்து 8 மணிக்குள்ளாக ஸேவித்து 10 மணிக்குள் சென்னைக்குள் திரும்பி விடலாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories