திருப்பள்ளி எழுச்சி-8: வம்பவிழ் வானவர் (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பரதலத்தில் நின்(று) அகல்கின்ற(து) இருள் போய் அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (8)

பொருள்

திவ்விய சரீரங்களை உடைய தேவர்களும், நாரதர் முதலான மகரிஷிகளும், தும்புருவும் உன் ஆலயத்துக்கு எழுந்தருளினர். நீ திருக்கண் நோக்குவதற்காக சங்க, பத்ம நிதியங்கள், தேவலோகப் பசுவாகிய காமதேனு முதலான அனைத்து மங்கலப் பொருட்களையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர். எத்திசையிலும் பரவும் ஒளியை உடைய சூரியனும் உதயமானான். ஆகாயத்தில் இருந்து இருள் அகன்றது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

thondaradipodiazhwar1
thondaradipodiazhwar1

அருஞ்சொற்பொருள்

வம்பு அவிழ் – பரிமள சுகந்தம் பொருந்திய, திவ்விய சரீரம் தாங்கிய

வாயுறை – தரிசனத்தின்போது எடுத்துச் செல்லப்படும் மங்கலப் பொருட்கள், மங்கல வாழ்த்து

மாநிதி – நிதிக்குவியல்

கபிலை – காமதேனு

ஒண் – ஒளிபொருந்திய

படிமக்கலம் – கண்ணாடி

படிமக்கலம் காண்டற்கு – திருக்கண் சாத்துவதற்கு

ஏற்பன ஆயின – உரிய பொருட்கள், ஏற்புடைய பொருட்கள்

தும்புரு – கந்தர்வரான இவர் நாரதரின் சீடர். மிகச் சிறந்த பாடகர். நாரதருக்கு இணையாகப் போற்றப்படும் விஷ்ணு பக்தர்.

அம்பரதலம் – ஆகாசம்

ஆன்மிகம், தத்துவம்

இறைவனை மனித உருவில் பாவித்து அவனுக்கு உபசாரங்கள் செய்வது பாரதத்தின் தொன்மையான மரபு.

வந்தி என்பது அரசனுக்குச் செய்யப்படும் உபசாரம். வைத்தாலிகம் என்பது ஆலயங்களில் பகவானுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவது. இவனோ அரங்கராஜா. எனவே, இவனுக்கு வந்தி உபசாரமும், வைத்தாலிக உபசாரமும் சேர்த்தே அளிக்கிறார் ஆழ்வார். (அதிகாலையில் உபநிஷதங்கள் அரங்கனுக்கு வந்தி, வைத்தாலிக உபசாரங்களைச் செய்வதாக ‘பாதுகா சஹஸ்ர’த்தில் வேதாந்த தேசிகர் பாடியிருப்பதும் நினைவுகூரத் தக்கது.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories