February 11, 2025, 4:29 PM
30.4 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி-8: வம்பவிழ் வானவர் (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பரதலத்தில் நின்(று) அகல்கின்ற(து) இருள் போய் அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (8)

பொருள்

திவ்விய சரீரங்களை உடைய தேவர்களும், நாரதர் முதலான மகரிஷிகளும், தும்புருவும் உன் ஆலயத்துக்கு எழுந்தருளினர். நீ திருக்கண் நோக்குவதற்காக சங்க, பத்ம நிதியங்கள், தேவலோகப் பசுவாகிய காமதேனு முதலான அனைத்து மங்கலப் பொருட்களையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர். எத்திசையிலும் பரவும் ஒளியை உடைய சூரியனும் உதயமானான். ஆகாயத்தில் இருந்து இருள் அகன்றது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

thondaradipodiazhwar1
thondaradipodiazhwar1

அருஞ்சொற்பொருள்

வம்பு அவிழ் – பரிமள சுகந்தம் பொருந்திய, திவ்விய சரீரம் தாங்கிய

வாயுறை – தரிசனத்தின்போது எடுத்துச் செல்லப்படும் மங்கலப் பொருட்கள், மங்கல வாழ்த்து

மாநிதி – நிதிக்குவியல்

கபிலை – காமதேனு

ஒண் – ஒளிபொருந்திய

படிமக்கலம் – கண்ணாடி

படிமக்கலம் காண்டற்கு – திருக்கண் சாத்துவதற்கு

ஏற்பன ஆயின – உரிய பொருட்கள், ஏற்புடைய பொருட்கள்

தும்புரு – கந்தர்வரான இவர் நாரதரின் சீடர். மிகச் சிறந்த பாடகர். நாரதருக்கு இணையாகப் போற்றப்படும் விஷ்ணு பக்தர்.

அம்பரதலம் – ஆகாசம்

ஆன்மிகம், தத்துவம்

இறைவனை மனித உருவில் பாவித்து அவனுக்கு உபசாரங்கள் செய்வது பாரதத்தின் தொன்மையான மரபு.

வந்தி என்பது அரசனுக்குச் செய்யப்படும் உபசாரம். வைத்தாலிகம் என்பது ஆலயங்களில் பகவானுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவது. இவனோ அரங்கராஜா. எனவே, இவனுக்கு வந்தி உபசாரமும், வைத்தாலிக உபசாரமும் சேர்த்தே அளிக்கிறார் ஆழ்வார். (அதிகாலையில் உபநிஷதங்கள் அரங்கனுக்கு வந்தி, வைத்தாலிக உபசாரங்களைச் செய்வதாக ‘பாதுகா சஹஸ்ர’த்தில் வேதாந்த தேசிகர் பாடியிருப்பதும் நினைவுகூரத் தக்கது.)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories