December 5, 2025, 6:04 PM
26.7 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி- 9: ஏதமில் தண்ணுமை (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி

விளக்கவுரை : வேதா டி.ஸ்ரீதரன்

ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோ(டு) இசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கிந்நரர் கெருடர்கள்
கந்தரு வருமிவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்க மருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (9)

பொருள்

கின்னரர்கள், யக்ஷர்கள், கருடர்கள், சாரணர்கள் முதலான தேவ கணங்களும், தேவர்களும், அருந்தவ முனிவர்களும், சித்த புருஷர்களும் இரவு முழுவதும் கீதங்களால் உன்னைத் துதித்தனர். அவர்களது பாடல்களும், அவற்றுடன் இசைக்கப்பட்ட குற்றமற்ற மேளம், யாழ், புல்லாங்குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகளின் நாதமும் அனைத்துத் திசைகளையும் வியாபித்தன. பக்தி மேலிட்ட அவர்கள் உன் திருவடிகளைத் தரிசிப்பதற்காகக் காத்து நிற்கின்றனர். நாள் முழுவதும் அவர்களுக்குக் காட்சி கொடுக்கும் விதமாக, அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

thondaradipodiazhwar1
thondaradipodiazhwar1

அருஞ்சொற்பொருள்

ஏதம் இல் – குற்றமற்ற

தண்ணுமை – சிறிய மேளம்

எக்கம் – ஒரே ஒரு தந்தி உடைய இசைக்கருவி

மத்தளி – மத்தளம்

யாழ் – வீணை

குழல் – புல்லாங்குழல்

முழவம் – முழக்கம், பேரிகை

கெழுமி – நிறைந்து

இவர் – இவர்கள்

மா தவர் – மஹரிஷிகள்

வானவர் – தேவர்கள்

கெந்தருவர் – கந்தர்வர்கள்

கெருடர் – கருடர்கள்

இயக்கர் – யக்ஷர்கள் (பதினெட்டு கணங்களில் ஒரு பிரிவினர்)

திருவடி தொழுவான் – உனது திருவடிகளைத் தரிசிப்பதற்காக

கங்குல் – இரவு

மயங்கினர் – பக்திக் களிப்பில் ஆழ்ந்தனர்

ஓலக்கம் – கொலு மண்டபம், ராஜ தர்பார் (தரிசனம் தருவது)

நாள் ஓலக்கம் – பகலில் கிடைக்கும் தரிசனம்

ஆன்மிகம், தத்துவம்

‘அரங்கனின் பெயரைச் சொல்லிக் கூவி ஆடிப்பாடித் திரியும் கைங்கரியத்தையே வழிபாடாகக் கொண்ட அடியார்களின் திருவடித் துகள்களில் நனையும் பேறு பெற்றவர்களுக்கு கங்கையில் நீராடும் வேட்கையும் ஏற்படுமோ?’ என்ற குலசேகர ஆழ்வாரின் வரிகளும் இங்கு நினைக்கத் தக்கவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories