February 11, 2025, 10:20 AM
27.5 C
Chennai

திருப்பள்ளி எழுச்சி- 9: ஏதமில் தண்ணுமை (உரையுடன்)

thondaradipodiazhwar
thondaradipodiazhwar

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி

விளக்கவுரை : வேதா டி.ஸ்ரீதரன்

ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோ(டு) இசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கிந்நரர் கெருடர்கள்
கந்தரு வருமிவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்க மருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (9)

பொருள்

கின்னரர்கள், யக்ஷர்கள், கருடர்கள், சாரணர்கள் முதலான தேவ கணங்களும், தேவர்களும், அருந்தவ முனிவர்களும், சித்த புருஷர்களும் இரவு முழுவதும் கீதங்களால் உன்னைத் துதித்தனர். அவர்களது பாடல்களும், அவற்றுடன் இசைக்கப்பட்ட குற்றமற்ற மேளம், யாழ், புல்லாங்குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகளின் நாதமும் அனைத்துத் திசைகளையும் வியாபித்தன. பக்தி மேலிட்ட அவர்கள் உன் திருவடிகளைத் தரிசிப்பதற்காகக் காத்து நிற்கின்றனர். நாள் முழுவதும் அவர்களுக்குக் காட்சி கொடுக்கும் விதமாக, அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

thondaradipodiazhwar1
thondaradipodiazhwar1

அருஞ்சொற்பொருள்

ஏதம் இல் – குற்றமற்ற

தண்ணுமை – சிறிய மேளம்

எக்கம் – ஒரே ஒரு தந்தி உடைய இசைக்கருவி

மத்தளி – மத்தளம்

யாழ் – வீணை

குழல் – புல்லாங்குழல்

முழவம் – முழக்கம், பேரிகை

கெழுமி – நிறைந்து

இவர் – இவர்கள்

மா தவர் – மஹரிஷிகள்

வானவர் – தேவர்கள்

கெந்தருவர் – கந்தர்வர்கள்

கெருடர் – கருடர்கள்

இயக்கர் – யக்ஷர்கள் (பதினெட்டு கணங்களில் ஒரு பிரிவினர்)

திருவடி தொழுவான் – உனது திருவடிகளைத் தரிசிப்பதற்காக

கங்குல் – இரவு

மயங்கினர் – பக்திக் களிப்பில் ஆழ்ந்தனர்

ஓலக்கம் – கொலு மண்டபம், ராஜ தர்பார் (தரிசனம் தருவது)

நாள் ஓலக்கம் – பகலில் கிடைக்கும் தரிசனம்

ஆன்மிகம், தத்துவம்

‘அரங்கனின் பெயரைச் சொல்லிக் கூவி ஆடிப்பாடித் திரியும் கைங்கரியத்தையே வழிபாடாகக் கொண்ட அடியார்களின் திருவடித் துகள்களில் நனையும் பேறு பெற்றவர்களுக்கு கங்கையில் நீராடும் வேட்கையும் ஏற்படுமோ?’ என்ற குலசேகர ஆழ்வாரின் வரிகளும் இங்கு நினைக்கத் தக்கவை.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories