December 5, 2025, 7:09 PM
26.7 C
Chennai

திருப்பாவை -9: தூமணி மாடத்து (பாடலும் விளக்கமும்)

thirupavai pasuram 9 - 2025
andal-vaibhavam-1

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 9

விளக்கவுரை: வேதா.டி.ஸ்ரீதரன்

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! (9)

பொருள்

ஒளிவீசும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகையில், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ, மென்மையான படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே, எழுந்திரு. மணிகள் பதிக்கப்பட்ட கதவைத் திறப்பாயாக. மாமி! நாங்கள் எத்தனையோ தடவை சப்தமாக அழைத்தும் உங்கள் மகள் எழுந்திருக்கவில்லை. நீங்களாவது அவளை எழுப்பக் கூடாதா? உங்கள் மகள் ஊமையா, செவிடா? காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இல்லாதவளா? அல்லது, எழுந்திருக்கக் கூடாது என்று யாராவது காவல் போட்டிருக்கிறார்களா? அல்லது, ஏதேனும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு உறங்குகிறாளா? மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று பகவானின் பல்வேறு திருநாமங்களைச் சொல்லி நாம் பாவை நோன்பை மேற்கொள்ளலாம். தோழியே, நீயும் எழுந்து வந்து எங்களோடு சேர்ந்துகொள்.

அருஞ்சொற்பொருள்

தூ – தூய்மையான

தூமணி – ரத்தினங்களால் இழைக்கப்பட்ட

தூமணி மாடம் – செல்வச் செழிப்பு மிக்க மாளிகை

துயில் அணை – படுக்கை

கண்வளரும் – உறங்கும்

மாமான் – மாமன், மாமா

மணிக்கதவம் – மணிகள் நிரம்பிய கதவு

மாமீர் – மாமியே

அனந்தல் – உறக்கம்

ஏமம் – காவல்

ஏமப்பெருந்துயில் – எழுந்திருக்க முடியாதபடி பெரும் தூக்கத்தால் கட்டுண்டவள்

மந்திரப்படுதல் – மந்திரத்தால் கட்டுப்பட்டு இருப்பது

நவில்தல் – சொல்லுதல்

மாமா, மாமி முதலியவை மூத்தவர்களைக் குறிக்கும் சொற்கள்.

800563 andal - 2025
aandal 2

மொழி அழகு

ஆண்டாளும் தோழிகளும் நடுக்கும் குளிரில் நீராடப் போவதற்காகத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பெண்ணோ சுகமாகத் தூங்குகிறாள். அவளது படுக்கை அறையைப் பற்றிய வர்ணனை மூலம் ஆண்டாள் அவளை வஞ்சப் புகழ்ச்சியில் (புகழ்வது போலப் பழிப்பது) கிண்டல் பண்ணுகிறாள்.

ஆன்மிகம், தத்துவம்

ஊமை, செவிடு, உறக்கத்தின் வசப்பட்டவள் என்பவை நமது உறுப்புக்களின் பயன்களை விளக்குவதற்காகச் சொல்லப்பட்டவை. இறைநாமங்களைப் பேசாத வாயும், கேட்காத செவியும் இருந்து என்ன பயன்? இறைசிந்தனையில் மூழ்காத மனம் அஞ்ஞான உறக்கத்தில் இருப்பதாகத்தானே பொருள்?

அனந்தல் என்பது தாமச குணத்தைக் குறிக்கிறது. தமோ குணத்தில் மூழ்கி இருக்கும் நாமும் நல்லோர் சேர்க்கையைக் கைக்கொண்டால், அவர்கள் நமக்காக மெனக்கெட்டு நம்மை நல்ல வழியில் ஈடுபடுத்துவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories