திருப்புகழ் கதைகள்: எந்தத் திகையினும்..!

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் 273
எந்தத் திகையினும் – சுவாமி மலை
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி ஆறாவது திருப்புகழான “எந்தத் திகையினும்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, பிறவி அலையில் யான் புகுதாமல், உம்மை வழிபட்டு உய்ய, இச் சபையில் வந்து அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

எந்தத் திகையினு மலையினு முவரியி

     னெந்தப் படியினு முகடினு முளபல

          எந்தச் சடலமு முயிரியை பிறவியி …… னுழலாதே

இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி

     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு

          என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ..முறையோடே

சந்தித் தரஹர சிவசிவ சரணென

     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை

          தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் …… குதிபாயச்

சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு

     னந்தத் திருநட மிடுசர ணழகுற

          சந்தச் சபைதனி லெனதுள முருகவும் …… வருவாயே

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி

     தந்தத் தனதன டுடுடுடு டமடம

          துங்கத் திசைமலை யுவரியு மறுகச …… லரிபேரி

துன்றச் சிலைமணி கலகல கலினென

     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர

          துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு …..மயில்வேலா

கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி

     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத

          கந்தப் பரிமள தனகிரி யுமையரு …… ளிளையோனே

கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்

     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்

          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய …பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – சல்லரி பேரிகை முதலிய வாத்தியங்கள், தொந்தத் திகுகுடதகுகுடடிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற ஒலியுடன், தூய எட்டுக் குலாசலங்களும் கடல்களும் அப்பேரிரைச்சலினால் துன்பமுறுமாறு நெருங்கி ஒலிக்கவும், விற்களிற் கட்டிய மணிகள் கலகலகல என்று ஒலி செய்யவும். தேவர்கள் கற்பக மலர்மாரி பெய்யவும், பிரமதேவரும் வேதங்களும் வியந்து துதி செய்யவும், அசுரர்கள் துன்புற்று இயமனுடைய நரகவுலகம் சேரவும், விடுத்தருளிய கூரிய வேலாயுதக் கடவுளே;

ALSO READ:  சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

பரிமள மிக்க சடை முடியை உடையவரும் செந்தீ வண்ணரும், பேராற்றலும் பேரழகுமுடையவரும் அடியேனுடைய பிதாவும் ஆகிய சிவபெருமானுக்கு உயிர் போன்றவரும், மலைமன்னன் திருமகளாரும் மரகத மேனியையுடையவரும், மிகுந்த வாசனை தங்கிய மலையனைய திருமுலைகளை உடையவருமாகிய உமையம்மையார் பெற்றருளிய திருப்புதல்வரே;

தாமரை வீட்டில் வீற்றிருக்கின்ற சீதேவியையும் பூதேவியையும் அழகிய பொற்கொடிபோல் துவளுகின்ற மெல்லிய இடையையுடைய நீளாதேவியையும் மருவுகின்ற நாராயண மூர்த்தியின் திருமருகரே; நல்ல பரிமள மிக்க மலர்ச் சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமிமலையின்மீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே;

எல்லாத் திசைகளிலும், வான முகட்டிலுள்ள அண்டங்களிலும் இருந்து வாழ்கின்ற நானா வகையான யோனி பேதங்கள் எல்லாவற்றிலும் அந்தந்த உடம்புகளை எடுத்துப் பிறந்து பிறந்து உழலாவண்ணம், எடுத்த இப்பிறப்புடன் முடிவடைந்து மீண்டும் இங்கு பிறவாமல் தேவரீருடன் அத்துவிதம் உற்று உயிர் நிலைபேறு அடையவும் தேவரீருடைய தாமரை மலர் போன்ற இரண்டு பொன்னடிகளிலும் வாசனை தங்கிய மலர்களைக் கொண்டு, அடியேனுடைய சித்தமும் மனமும் நீராயுருகவும், நல்ல வேதங்களிற் கூறிய முறைப்படி தேவரீரைச் சந்தித்து, ஹரஹர சிவசிவ உமக்கே சரணம் என்று கூறி வணங்கவும், தேவரீருடைய இரண்டு சரணாரவிந்தங்கள் அடியேனுடைய சென்னிமேல் தங்கவும், உடல் புளகிக்கவும், இரண்டு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் மலையருவிபோல் குதித்தோடவும், சம்பைக் கொடிபோன்ற மெல்லிய இடையையுடைய உமையம்மையாரது அழகிய திருமுன்னர், அழகிய திருநடம் புரியும் திருவடி அழகு செய்யவும், (எளியேன் முன்வரும் உமது திருவருளின் பெருக்கை யெண்ணி) அடியேனுடைய உள்ளம் உருகவும் அழகிய இச்சபையில் வந்து அருள் புரிவீர் – என்பதாகும்.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

பிரபுட தேவன் அல்லது பிரபுட தேவராயன் என்ற மன்னன் அவையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளியது இப்பாடல். யார் அந்த பிரபுடதேவராயன்? நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories