திருப்புகழ் கதைகள்: கறைபடும் உடம்பு

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 294
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கறைபடும் உடம்பு – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றிப் பதினொன்றாவது திருப்புகழான “கறைபடும் உடம்பு” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, உமது திருவடி மலரை, ஞானமலர்களால் அர்ச்சித்து வீடு பெற அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கறைபடுமு டம்பி ராதெனக்

     கருதுதலொ ழிந்து வாயுவைக்

          கருமவச னங்க ளால்மறித் …… தனலூதிக்

கவலைபடு கின்ற யோககற்

     பனைமருவு சிந்தை போய்விடக்

          கலகமிடு மஞ்சும் வேரறச் …… செயல்மாளக்

குறைவறநி றைந்த மோனநிர்க்

     குணமதுபொ ருந்தி வீடுறக்

          குருமலைவி ளங்கு ஞானசற் ……    குருநாதா

குமரசர ணென்று கூதளப்

     புதுமலர்சொ ரிந்து கோமளப்

          பதயுகள புண்ட ரீகமுற் ……         றுணர்வேனோ

சிறைதளைவி ளங்கு பேர்முடிப்

     புயலுடன டங்க வேபிழைத்

          திமையவர்கள் தங்க ளூர்புகச் ……   சமராடித்

திமிரமிகு சிந்து வாய்விடச்

     சிகரிகளும் வெந்து நீறெழத்

          திகிரிகொள நந்த சூடிகைத் ……      திருமாலும்

பிறைமவுலி மைந்த கோவெனப்

     பிரமனைமு னிந்து காவலிட்

          டொருநொடியில் மண்டு சூரனைப் …… பொருதேறிப்

பெருகுமத கும்ப லாளிதக்

     கரியெனப்ர சண்ட வாரணப்

          பிடிதனைம ணந்த சேவகப் ……      பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – சக்ராயுதத்தை உடையவரும், ஆதிசேடன் முடியில் விளங்குபவரும், ஆகிய திருமால், தன் மகன் பிரமதேவர் தலையில் குட்டுவதைக் கண்டு, “சந்திர சேகரரது, திருக்குமாரரே, இது முறையோ?” என ஓலமிட, பிரணவத்தின் பொருள் உரைக்காது விழித்த பிரமதேவனைக் குட்டிச் சினந்து, சிறையில் அடைத்து, சிறையிலிருந்து துன்புறுகின்ற மேகவானனாகிய இந்திரன் முதலிய இமயவர்கள் சிறையினின்று, நீங்கித் தங்கள் பொன்னுலகஞ் சேர்ந்து இன்புறவும், இருள் நிறைந்த கடல் ஓலமிட்டலறவும், குலமலைகள் வெந்து நீறாகவும், நெருங்கி வந்த சூரனை ஒரு நொடிப் பொழுதில் போர்புரிந்து வென்று, மதம் பொழிகின்ற மத்தகத்தையுடைய அழகிய யானையென்று கூறுமாறு மிகுந்த வலிமையுடைய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தெய்வ குஞ்சரியம்மையை மணந்துகொண்ட வீரரே; பெருமிதம் உடையவரே;

     இரத்தம் நிறைந்த உடம்பு நிலைத்திராது என்று எண்ணுவதைத் தவிர்த்து, நிலைத்திருக்குமென்று எண்ணி, பிராணவாயுவை ஆகருஷண ஸ்தம்பனாதி மந்திரங்களால் கும்பித்து, அப்பிராணவாயுவால் குண்டலிசத்தியை எழுப்பி, “சித்தியடைய வேண்டுமே” என்று கவலைப்படுகின்ற ஹட யோகம் முதலியவைகளின் கட்டளைகளை நினைக்கின்ற சிந்தனை தொலையவும், ஒருமுகப்பட்டுத் தியானிக்க வொட்டாமல் கலகம் புரிகின்ற ஐவாய் வழிச் செல்லும் சத்தாதி ஐந்தும் அடியோடு அழியவும், ‘என்செயல்‘ என்பது நீங்கவும், குறைவில்லாத நிறைந்த மௌனத்தையடைந்தும் சத்துவ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்கள் நீங்கி அருட்குணம் பெற்று முக்தியை யடையவும், “சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள ஞானசற்குருநாதரே! குமாரக் கடவுளே,” என்று துதித்து, புதிய கூதள மலர்களால் அருச்சித்து, தேவரீருடைய இளமை பொருந்திய இரண்டு திருவடித் தாமரைகளை யடைந்து அத்திருவடி இன்பத்தை உணர்ந்து உய்வேனோ? – என்பதாகும்.

     இப்பாடலில் யோக மார்க்கத்தை விட பக்தி மார்க்கம் சிறந்தது என அருணகிரியார் கூறுகிறார். யோக மார்க்கம் என்றால் என்ன? நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories