30-03-2023 11:13 AM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்பாவை பாசுரம் 14 : உங்கள் புழைக்கடை

    To Read in other Indian Languages…

    திருப்பாவை பாசுரம் 14 : உங்கள் புழைக்கடை

    உங்கள் வீட்டுப் புழைக்கடையில் உள்ள தோட்டத்தில் அழகான தடாகம் இருக்கிறது. அதில் செங்கழு நீர்ப் பூக்கள் வாய் திறந்து அழகாக

    thiruppavai pasuram 14

    உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
    செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: பதிமூன்றாம் பாசுரத்தில் கண்ணனுடன் கூடிக் குலவ வாய்த்த இந்தக் காலத்தில் நீ மட்டும் அவனின் சேட்டைகளை நினைத்து தனித்துக் கிடக்கும் கபடத்தைக் கொண்டிருக்கிறாயே! அதைக் கைவிட்டு எழுந்து வா என்று தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள் இந்தப் பாசுரத்தில், எங்களை முன்னம் எழுப்புவதாகச் சொல்லி இப்போது உறங்குகிறோமே என்ற நாணம் இல்லாமல் இருப்பவளே இனியாவது எழுந்துவா என்று அழைக்கிறார்.

    உங்கள் வீட்டுப் புழைக்கடையில் உள்ள தோட்டத்தில் அழகான தடாகம் இருக்கிறது. அதில் செங்கழு நீர்ப் பூக்கள் வாய் திறந்து அழகாகப் பூத்து வாவென அழைக்கின்றன. ஆம்பல் மலர்களின் வாயோ மூடிப் போய் குறுகி நிற்கின்றன.

    காவிப் பொடியில் தோய்த்து எடுத்த வஸ்திரங்களை உடுத்தியவர்கள் இந்த தவசிகள். அவர்கள் வெண்மை நிறமுள்ள தூய பற்களை உடையவர்கள். அத்தகைய தூய்மை நிறைந்த சந்நியாசிகள், மூடப்பட்டிருக்கும் தங்கள் திருக்கோயில்களின் கதவுகளைத் திறவுகோல் கொண்டு திறந்து திரைவிலக்கச் செல்கின்றனர்.

    நாங்கள் எழுவதற்கு முன்பே எழுந்து, எங்களை வந்து எழுப்புவதாகச் சொல்லிச் சென்றவளே! வீறாப்பு மிகுந்த பேச்சால் எங்களை மயக்கிய நங்கையே! நாம் அவர்களிடம் சொன்னபடி முன்பே சென்று அவர்களை எழுப்பிவிடாமல், அவர்கள் நம் வீட்டு வாசலில் நிற்க இப்படி படுக்கையில் இருக்கிறோமே என்ற வெட்கம் கொஞ்சமும் இல்லாதவளே! இனிமையான பேச்சினை வெளிப்படுத்தும் நாவினை உடையவளே! சங்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டுள்ள விசாலமான திருக்கைகளை உடையவன் கண்ணன். தாமரை மலர் போன்ற திருக்கண்களைக் கொண்டஅந்தக் கண்ணனைப் பாடுவதற்காக நீ விரைந்து எழு… என்று தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

    விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    17 + eighteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,034FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...