பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

pandalam aiyappa swami temple - 2026

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று மாசி உத்திரம் நட்சத்திரத்தை ஒட்டி, பந்தளம் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப ஜயந்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க திருவாபரணங்கள் பந்தளம் ஐயப்பனுக்கு இன்று அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் இன்று இரவு வரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் குவிந்தனர்.

கேரளத்தில், பிரசித்தி பெற்ற சுவாமியாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்பன் பொதுவாக பங்குனி மாதம் உத்திர நாளில் அவதரித்ததாகக் கருதப்பட்டு, அன்று ஐயப்பனுக்கு ஜன்ம தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

சபரிமலை, ஆரியங்காவு உள்ளிட்ட முக்கிய கோவில்களில் மட்டும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடத்தி ஜன்ம தின வழிபாடு கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும், சபரிமலையில் ஐயப்பனுக்கு ஐயப்பன் அவதார நன்னாளான பங்குனி உத்திரத்தில் பம்பை நதியில் ஆராட்டு விழா விமர்சையாக நடைபெறுவது முக்கியமானது.

இந்த நிலையில் பந்தளம் வலிய கோயிக்கல் அரண்மனையில் உள்ள சுவாமி ஐயப்பன் அவதாரத் திருநாள் விழா – மாசி உத்திரம் விழா கோலாகலமாக இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு பந்தளம் ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்களும் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம் முடிந்து, ஐயப்பன் கிருவாபரணங்கள் பந்தளம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. பந்தளம் ஐயப்பனுக்கு சபரிமலை ஐயப்பனின் தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த தரிசனத்தைக் கண்டு களித்தனர்.

பகலில் கலபாபிஷேக வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பகல் மூடாமல் இரவு 9 மணி வரை சபரிமலை ஐயனின் திருவாபரணங்கள் அணிந்த பந்தளம் ஐயப்பனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் பந்தளத்தில் இருந்தது. இரவு பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories