மதுரை பகுதியில் பங்குனி உத்ஸவ விழாக்கள்!

madurai panguni utchavam - 2026

அலங்காநல்லூர் அருகே மறவர் பட்டியில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், மறவர் பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மஞ்சமலை சுவாமி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை சாமி சாட்டுதல் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து வெள்ளிக்கிழமை பூசாரிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு காப்பு கட்டுதல் தொடர்ந்து கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சனிக்கிழமை அன்று பிடிமம் கொடுத்தல் ஞாயிற்றுக்கிழமை கும்மி பாட்டு கலை நிகழ்ச்சி திங்கட்கிழமை அன்று ஊத்துக்காடு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அருள்மிகு கன்னிமார் கருப்புசாமி கோவில் பொங்கல் வைத்து அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

செவ்வாய்க்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ விநாயகர் காளியம்மன் கோவில் முத்தாலம்மன் கோவில் மஞ்ச மலையாண்டி கோவில் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.

புதன்கிழமை அன்று முத்தாலம்மன் கண் திறக்கின்ற இடத்தில் உள்ள மேடையில் எழுந்தருளி கண் திறந்து ஆடை ஆபரணங்கள் அலங்காரம் செய்து வாண வேடிக்கை ஆலயம் வந்து சேர்ந்தன.

வியாழக்கிழமை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பால்குடம் அக்னி செட்டிநாடு கிடாய் வெட்டுதல் பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று அன்னதானம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டுதல் வளையம் பிரித்தல் பிரசாதம் வழங்குதல் ஆகியவை உடன் திருவிழா நிறைவேறியது விழா விற்கான ஏற்பாடுகளை மறவபட்டி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

பங்குனி பெருந் திருவிழா!

இராஜபாளையம் அருகே கொம்மந்தாபுரம் இந்து நாடார் உறவினருக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கொம்ந்தாபுரம் பகுதியில் உள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இந்தக் கோவிலில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இது வழக்கத்தில் உள்ளது 50 ஆண்டுகளுக்கு பின்பு புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது பங்குனி திரு விழாவிற்கு கெடியேற்றப்பட்டுள்ளது

இந்த பூக்குழி திருவிழாவை காண்பதற்கு இராஜபாளையம் சேத்தூர் முகவூர் ப உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வர்கள்.
இந்த பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை ராஜபாண்டி
தலைவர் செல்லத்துரை உபதலைவர் ராஜ்குமார் மற்றும் ஒரு பொதுமக்கள்
சார்பில் செய்யப்பட்டுள்ளன.

சோழவந்தான் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது பூமேட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைகையாற்றுக்கு சென்று பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது பின்னர் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பொதுமக்கள் முளைப்பாரி எடுக்கும் தாய்மார்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

முளைப்பாரி பதியமிடல் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அடுத்த வாரம் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா, லயன் டாக்டர் மருதுபாண்டியன், கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பங்குனி: கனி மாற்று விழா!

மதுரை மாவட்டம், பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு செல்லத்தம்மன் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி மாதத்தை ஒட்டி மழை வேண்டியும் உலக நன்மை வேண்டியும் கனி மாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

500- க்கும் மேற்பட்ட பெண்கள் பழ தட்டுடன் ஊர்வலமாக வந்துசாமி தரிசனம் செய்து கனி மாற்றி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை
பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபை சார்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories