January 25, 2025, 3:26 PM
29 C
Chennai

“பெரியவாளின் சினமும்-வைத்யமும்”

1969132_763012707087106_4352134091554339462_nபெரியவாளின் சினமும்-வைத்யமும்”

தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது.
எத்தனையோ மருத்துவம் பார்த்தாயிற்று. எந்தப் பலனும் இல்லை.இந்நிலையில்தான்
பெரியவாளை தரிசிக்க வந்தார் அந்த பக்தர்.
 
பெரியவாளைக் கண்டவுடனே ஒரே கதறல்.
இம்மாதிரி சமயங்களில்,வாத்சல்யத்துடன்
அன்புடனும் பேசுவார்கள் பெரியவா.
 
ஆனால் இப்போது மிகக் கோபமாக கடிந்து
கொண்டார்கள்.“செய்வதெல்லாம் பாவ காரியம். பாவம் செய்கிறோம்
என்பதை உணர்வதும் இல்லை” என்றார்கள்.
 
ஏன் பெரியவா இப்படியெல்லாம் பேசுகிறார்கள்
என்று சிஷ்யருக்கு புரியவில்லை.
 
“இவரின் குடும்பத்தாரால் ட்ரஸ்ட் ஒன்று
ஆரம்பிக்கப்பட்டது.அது தர்ம காரியங்களுக்கானது.
விளை நிலங்களுக்கும் குறைவில்லை. தண்ணீர்
பந்தல் அமைத்து தாராளமாகத் தர்மம் பண்ணலாம்.
ஆனால் இவர் அந்த சொத்தையே விலை பேசி விட்டார்”
என்றார்கள் ஸ்வாமிகள்.
 
வந்தவருக்கு தன் தவறு புரிந்தது.“இனி இத்தவறு நடக்காது.தண்ணீர் பந்தல்
அமைத்து தர்ம காரியம் செய்வேன்” என்றார் உறுதியாக.
 
சற்று சினம் தணிந்த பெரியவா,“வசம்பை அரைத்து வயிற்றில் தடவிக்கோ சரியாயிடும்”
 சில நாட்கள் சென்றபின், மீண்டும் வந்த அவர்
பெரியவா விசாரிப்பதற்கு முன்பாக, “இப்போ எந்த தொந்தரவும் இல்லை” என்று கூறினார்.
 
வசம்பைத் தடவச் சொன்னவர் ஸ்வாமிகளாயிற்றே!
ALSO READ:  பக்தர்கள் நெரிசலில் சபரிமலை; விபத்துகளைத் தடுக்க போலீஸார் எச்சரிக்கை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.