மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தை சார்ந்த 100 மகளிர், வள்ளிக்கண்ணு மாணிக்கம் தலைமையில் ஆன்மீக சுற்றுலாவாக கரூர் பசுபதீஸ்வரர் கோயில், வழிபாட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு கரூர் நகரத்தார் சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமையில் சங்க கட்டிடத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. செயலாளர் மேலை.பழநியப்பன், கரூவூரின் சிறப்புகளை விளக்கி பேசினார். மதுரை மகளிர் சங்க நிர்வாகிகள் கரூர் சங்க நிர்வாகிகளிடம் நினைவு பரிசினை வழங்கினர். நகரத்தார் சங்க காப்பாளர் சுப.லெட்சுமணன், பொருளாளர் கே.எம்.குமார், துணை செயலாளர் கரு.ரத்தினம், வங்கி லட்சுமணன், அகல்யா.மெய்யப்பன், ஏ.ஆர்.அண்ணாமலை, ராம்.மெய்யப்பன், வாங்கல் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தினருக்கு கரூரில் வரவேற்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari