ஆன்லைனில் ஆண்களை குறி வைத்து மோசடி! சிக்கிய கும்பலால் வெளியான அதிர்ச்சி தகவல்!

cell phone
cell phone

சென்னை மற்றும் சண்டிகரில் சபல புத்தியுள்ள ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு விபச்சார கும்பல் உதய்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டது.

ராஜஸ்தானின் சலும்பர் தாலுக்காவில் இருந்து நடத்தப்பட்ட இந்த மோசடி மோசடி மூலம் 30’க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் துங்கர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள் ஆவர். குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களை ஏமாற்ற கற்றுக்கொண்டார்.

அதில் நிறைய பணம் வந்ததை அடுத்து, இந்த மோசடியை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் இ-வாலட்களில் பணம் பெற்று வந்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மணிலால் வெல்கி, மணிலால் மன்ஜி, ஜிதேந்திர மற்றும் ஹரிஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சலும்பரில் இளைஞர்கள் ஒரு குழு பகட்டாக பணத்தை செலவழித்து வந்தது அங்கிருந்த மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறை முறையாக விசாரித்ததில் முழு உண்மையும் வெளிவந்துள்ளது.
பின்னர் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வசித்து வந்த இடத்தை சோதனை செய்ததில், பல மொபைல் போன்கள், போலி சிம் கார்டுகள், மடிக்கணினிகள் மற்றும் ரூ .5 லட்சம் மதிப்புள்ள பணத்தை மீட்டனர். ஆரம்பத்தில், இளைஞர்கள் ஒரு பந்தய மோசடியை நடத்துவதாக போலீசார் சந்தேகித்தனர்.

எனினும், விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 15 நாட்களாக ஆன்லைன் விபச்சார மோசடி நடத்தி வருவது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் விபச்சார சேவைகளை வழங்குவதற்காக லோகாண்டோ மொபைல் செயலியில் விளம்பரங்களை பதிவேற்றியுள்ளனர்.

விளம்பரத்தில் கிளிக் செய்த நபர்கள் பெண்களின் புகைப்படங்களை மங்கலாக்கும் ஒரு பக்கத்திற்கு அனுப்பப்படுகின்றனர். அதில் ஒரு பாப்-அப் மெசேஜ் தோன்றி, ரூ 500 செலுத்துமாறு கேட்கிறது. பணம் செலுத்திய பிறகு,

ஒரு படத்தொகுப்பு திறக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய பெண்களைத் தேர்ந்தெடுக்க கூறுகிறது. பின்னர் தேர்ந்தெடுத்தவுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேவையில் தங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்த ரூ 5 ஆயிரம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

காவல்துறையினருக்கு உதவிய சைபர் கிரைம் நிபுணர் முகேஷ் சவுத்ரி, “அவர்களால் ஏமாற்றப்பட்ட நபர்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிய அவர்களின் இ-வாலட்களில் எத்தனை உள்வரும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

மேலும், அவர்களின் வாட்ஸ்அப் அரட்டைகள் மூலம் இந்த மோசடி வேறு நகரங்களிலும் பரவியுள்ளதா என கண்டுபிடிக்கப்படுகின்றன.” எனக் கூறினார்.

ராஜஸ்தானின் ஒரு சிறிய நகரத்தில் இருந்து கொண்டு, சென்னை வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories