கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்ததுரியோதனன் படுகளம்..

Published:

கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று கோவில் வளாகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி நீளத்திற்கும் 40 அடி அகலத்திலும் மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த துரியோதனன் சிலையின் முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

202204241343096674 Duryodhana Padukalam show at Kolathur Thiravupathiamman SECVPF - 2026

இந்நிகழ்வில் நாடக கலைஞர்கள் துரியோதனனும் , பீமனும் வேடமிட்டு தத்ரூபமாக போர்க்களத்தில் சண்டையிடுவது போல நடித்து காட்டினர். 

துரியோதனன் படுகளம் ஆனாதும் பாஞ்சாலை கூந்தலை அள்ளி முடித்து சபதத்தை நிறைவேற்றிய காட்சிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து மாலையில் தீமிதி விழா நடைபெற்றது.நாளை தருமர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது. 

Related articles

Recent articles

spot_img