


வண்ணமயமான மணக்கும் புஷ்பயாகத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவில் நிறைவு நாளன்று ஆண்டாள் ரங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பல்வேறு வண்ண மலர்கள் கொண்டு புஷ்ப யாகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்




