நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

siruvapuri murugan temple - 2026
#image_title

6. சிறுவாபுரி முருகன் ஆலயம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயிலில் இருந்து மீண்டும் வந்த வழியாகவே சென்னை நோக்கிப் பயணித்தால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் வலதுபுறம் திரும்பி மேலும் 2 கிலோமீட்டர் பயணித்தால் சிறுவாபுரி முருகன் கோயில் வரும். சிறிய கோயில். அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். வீடு வாங்கும் யோகம் பெற, திருமணப் பேறு பெற, குழந்தை பிறக்க என பல வேண்டுதல்களுடன் மக்கள் வருகின்றனர். கோயிலில் ஏராளமானோர் உணவுப் பிரசாதம் விநோயகம் செய்கின்றனர்.

          இந்த இடத்தில் இராமரின் மகன்களான லவனும் குசனும் வாழ்ந்ததாக கோவிலின் வரலாறு கூறுகிறது. ஒருமுறை இராமன் இவ்விடம் கடந்து செல்லும் போது, ​​இராமன் தந்தை என்பதை அறியாமல் அவனுடனேயே போர் புரிந்துள்ளனர். சிறு பிள்ளைகள் இங்கு போர் தொடுத்ததால் இத்தலம் சிறுவர் போர் புரி என அழைக்கப்பட்டது. இந்த இடம் இப்போது சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது, இது சிறுவர்+அம்பு+ஏடு என்பதிலிருந்து மருவி வந்திருக்கலாம் என இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.  ‘ஏடு’ என்ற சொல் அம்பறாத்துணியைக் குறிக்கும்.

ALSO READ:  மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

          இந்த ஊரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் முருகம்மை என்ற பெண் இருந்தாள். அவள் இங்குள்ள முருகப்பெருமானின் தீவிர பக்தையாக இருந்தாள். அவள் எப்பொழுதும் முருகனை வழிபடுவதை விரும்பாத அவள் கணவன் அதை நிறுத்தும்படி எச்சரித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் அவளது கணவன் கோபத்தில் அந்தப் பெண்ணின் கையை வெட்டிவிட்டான். அப்போதும், முருகப் பெருமானிடம் முருகம்மை கதறி அழுதாள். அவளது பக்தியில் மகிழ்ந்த இறைவன், அவள் கைகளை எந்த காயமும் இல்லாமல் மீண்டும் இணைக்கச் செய்தார்.

          இங்குள்ள முருகப்பெருமான் ஸ்ரீ பாலசுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த அழகிய கோயிலில் ஸ்ரீ அண்ணாமலையார் (சிவன்) மற்றும் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் ஆகியோரும் உள்ளனர். முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தி, ஸ்ரீ வள்ளியுடன் திருமண கோலத்தில் வள்ளி மணாளராக காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகப்பெருமான் வீடு வாங்க விரும்புவோருக்கு அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. வீடு வாங்க விரும்பும் பலர் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இங்குள்ள முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

          முருகனின் பல்வேறு பெயர்களில் வள்ளிக் கணவன் என்ற பெயரே முதன்மையானது. வள்ளி இங்கு இச்சா சக்தியாக ஜொலிக்கிறாள். இக்கோயிலின் தனிச்சிறப்பு மரகத மயில், அதாவது பச்சைக் கல்லால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் வாகனமாகும்.

          கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். முருகப்பெருமான் மீது அர்ச்சனை திருப்புகழ் ஒன்றையும் இயற்றியுள்ளார். இங்கே மரகத விநாயகர், ஆதி முருகன், நாகர், வெங்கட்ராயர், முனீஸ்வரர் மற்றும் பைரவர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

          கோயிலுக்கு வெளியில் பச்சைக் காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றை வியாபாரிகள் விற்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஞாயிற்று கிழமைகளிலும் கூட்டம் வருகின்றது.

          இந்தக்கோயிலின் தரிசனத்திற்குப் பின்னர் ஞாயிறு கோயிலுக்குப் புறப்பட்டோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories