மூன்றாவது டெஸ்ட்… பரவாயில்லை ரகம்!

india sa test - 2026

இந்தியா-தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் – முதல்நாள்
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன் –

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் இன்று “கேப்டவுன்” நகரில் தொடங்கியது. விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால் அவர் இன்று விளையாடுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அவருக்குப் பதிலாக இந்திய அணியிலிருந்து நீக்கப்படுபவர் ஹனுமான் விஹாரியா? புஜாராவா? ரஹானேயா என நேற்றுவரை குழப்பம் நீடித்தது. விஹாரி விளையாடமாட்டார்; அனுபவ வீரர்களுக்கே முதல் வாய்ப்பு என கோலி கூறிவிட்டார். எனவே இன்று இந்திய அணியில் விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும், காயமடைந்த சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம் எதுவும் இல்லை.

விராட் பூவாதலையா வென்று மட்டையாட முடிவுசெய்தார். ராகுலும் மயங்க் அகர்வாலும் நன்றாக விளையாடினர். தென் ஆப்பிரிக்க பவுலர்களும் நன்றாகப் பந்து வீசினர். அதிலும் குறிப்பாக ரபாடா மிக நன்றாக பந்து வீசினார். 12 ஓவர்கள் முடிவதற்குள் ராகுலும் அகர்வாலும் ஆட்டமிழந்தனர். பின்னர் புஜாராவும் கோலியும் கிட்டதட்ட 25 ஓவர்கள் விளையாடினர். கோலியை விட புஜாரா நன்றாக விளையாடினார். இருப்பினும் ஜேன்சனின் ஒரு பந்தை சரியாக கவனிக்காமல் ஆடி விக்கட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த ரஹானேயும் கிட்டத்தட்ட அதே வகையான பந்தில் அவுட்டானார். அது ரபாடா வீசிய பந்து. கோலி அதற்கு ரிவியூ கேட்டார். ஆனால் பந்து தெளிவாக மட்டையில் பட்டதை ரிவியூ காட்டியது. அதனால் ரஹானே அவுட்டானார். ரிஷப் பந்த் 50 பந்துகள் ஆடி 27 ரன் எடுத்தார். அதற்கு பின்னர் வந்தவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே இந்தியா 77.3 ஓவர்களில் 223 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.

விராட் கோலி எடுத்த 79 ரன்கள் மிகச் சிறப்பானவை. அவர் 13ஆவது ஓவரில் விளையாட வந்து 73ஆவது ஓவரில் அவுட்டானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் விளையாடுவதே முக்கியம். அந்த வகையில் இன்று விராட் கோலியும் ஓரளவிற்கு புஜாராவும் நன்றாக விளையாடினார்கள். மற்றவர்கள் சரியாக விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணி பாக்கியிருந்த நேரத்தில் எட்டு ஓவர்கள் விளையாடினார்கள். பும்ரா 4 ஓவர், அந்த நான்கும் மெய்டன், அதில் ஒரு விக்கட்; அவுட்டானது எல்கர். சென்ற டெஸ்டில் அவர்தான் வெற்றிக் கனியை இந்தியாவிடமிருந்து பறித்தது. ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கட் இழப்பிற்கு 17 ரன் எடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories