March 19, 2025, 2:33 AM
28.5 C
Chennai

1000வது போட்டியில் வென்று அசத்திய இந்திய அணி!

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மேற்கிந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகள் இன்று, இம்மாதம் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறும். டி20 போட்டிகள் இம்மாதம் 16, 18. 20 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும்.

மேற்கிந்திய அணி அண்மைக்காலமாக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணியும் தெனாப்பிரிக்காவில் மிக மோசமாக விளையாடிவிட்டு திரும்பியிருக்கிறது. இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் தனது தங்கையின் திருமணம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

எனவே ரோகித் ஷர்மாவுடன் ஷிகர் தவான் ஓப்பனிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவான், ஷ்ரெயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்.

எனவே இந்திய அணியும், மேற்கிந்திய தீவு அணியும் கிட்டத்தட்ட சமமான நிலையில் இருப்பதாக அனைவரும் எண்ணினர். ஆனால் நடந்தது வேறு. இந்தியா டாஸ் வென்று மேற்கிந்திய அணியை மட்டையாடச் சொன்னது. இதானால் இரண்டாவதாக இந்தியா பேட் செய்யும்போது மேற்கிந்திய அணிக்கு பனியால் பந்து ஈரமாகும் பிரச்சனை ஏற்பட்டது.

மற்றபடி இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றது. இன்றைய ஆட்டத்தை லேசர் அறுவைசிகிச்சை ஆட்டம் எனச் சொல்லலாம். இந்திய பந்துவீச்சாளர்கள் மிக நன்றாக பந்து வீசினார்கள். ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கட்டுகளையும், சாஹால் அதேபோல ஒரே ஓவரில் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

ரன் ரேட்டை குறைவாகவே வைத்திருந்தார்கள். இதனால் மேற்கிந்திய அணியால் 50 ஓவர் முழுவதுமாக ஆடமுடியவில்லை. அவர்கள் 43.5 ஓவரில் 176 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தார்கள். அடுத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்தும் (60 ரன், 51 பந்துகளில்) இஷான் கிஷன் (36 பந்துகளில் 28 ரன்) நன்றாக விளையாடினார்கள்.

14ஆவது ஓவரின் முதல் பந்தில் ரோகித்தும் ஐந்தாவது பந்தில் கோலியும் அவுட்டானார்கள். 17ஆவது ஓவரில் இஷான் கிஷன் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரில் ரிஷப் பந்த் அவுட்டானார். பின்னர் ஆட வந்த சூர்யகுமார் யாதவ்வும் தீபக் ஹூடாவும் நன்றாக ஆடி 28 ஓவரில் 178 ரன் எடுத்து இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

தீபக் ஹூடாவிற்கு இது முதல் ஒருநாள் போட்டி. இந்தியாவிற்கு இது 1000மாவது ஒருநாள் போட்டி. என்னைப் பொருத்த வரையில் அடுத்த போட்டியில் ரிஷப் பந்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் ஒழுங்காக ஆடுவார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Topics

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories