December 5, 2025, 3:01 PM
27.9 C
Chennai

1000வது போட்டியில் வென்று அசத்திய இந்திய அணி!

wi vs ind - 2025

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மேற்கிந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகள் இன்று, இம்மாதம் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறும். டி20 போட்டிகள் இம்மாதம் 16, 18. 20 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும்.

மேற்கிந்திய அணி அண்மைக்காலமாக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணியும் தெனாப்பிரிக்காவில் மிக மோசமாக விளையாடிவிட்டு திரும்பியிருக்கிறது. இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் தனது தங்கையின் திருமணம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

எனவே ரோகித் ஷர்மாவுடன் ஷிகர் தவான் ஓப்பனிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவான், ஷ்ரெயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்.

ind vs wi - 2025

எனவே இந்திய அணியும், மேற்கிந்திய தீவு அணியும் கிட்டத்தட்ட சமமான நிலையில் இருப்பதாக அனைவரும் எண்ணினர். ஆனால் நடந்தது வேறு. இந்தியா டாஸ் வென்று மேற்கிந்திய அணியை மட்டையாடச் சொன்னது. இதானால் இரண்டாவதாக இந்தியா பேட் செய்யும்போது மேற்கிந்திய அணிக்கு பனியால் பந்து ஈரமாகும் பிரச்சனை ஏற்பட்டது.

மற்றபடி இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றது. இன்றைய ஆட்டத்தை லேசர் அறுவைசிகிச்சை ஆட்டம் எனச் சொல்லலாம். இந்திய பந்துவீச்சாளர்கள் மிக நன்றாக பந்து வீசினார்கள். ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கட்டுகளையும், சாஹால் அதேபோல ஒரே ஓவரில் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

ரன் ரேட்டை குறைவாகவே வைத்திருந்தார்கள். இதனால் மேற்கிந்திய அணியால் 50 ஓவர் முழுவதுமாக ஆடமுடியவில்லை. அவர்கள் 43.5 ஓவரில் 176 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தார்கள். அடுத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்தும் (60 ரன், 51 பந்துகளில்) இஷான் கிஷன் (36 பந்துகளில் 28 ரன்) நன்றாக விளையாடினார்கள்.

14ஆவது ஓவரின் முதல் பந்தில் ரோகித்தும் ஐந்தாவது பந்தில் கோலியும் அவுட்டானார்கள். 17ஆவது ஓவரில் இஷான் கிஷன் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரில் ரிஷப் பந்த் அவுட்டானார். பின்னர் ஆட வந்த சூர்யகுமார் யாதவ்வும் தீபக் ஹூடாவும் நன்றாக ஆடி 28 ஓவரில் 178 ரன் எடுத்து இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

தீபக் ஹூடாவிற்கு இது முதல் ஒருநாள் போட்டி. இந்தியாவிற்கு இது 1000மாவது ஒருநாள் போட்டி. என்னைப் பொருத்த வரையில் அடுத்த போட்டியில் ரிஷப் பந்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் ஒழுங்காக ஆடுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories