IPL 2022: சென்னை – லக்னௌ- அதிரடி ரன் வேட்டைகள்

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – சென்னை vs லக்னோ
– K.V. பாலசுப்பிரமணியன் –

மும்பையின் ப்ராபோர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடந்த ஏழாவது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் சென்னை அணியை மட்டையாடச் சொன்னார்.

சென்னை அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன் அடித்து நல்ல தொடக்கத்தைத் தந்தார். ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. ஆனால் மொயின் அலி (22 பந்துகளில் 35 ரன்), ஷிவம் துபே (30 பந்துகளில் 49 ரன்), அம்பாடி ராயுடு (20 பந்துகளில் 27 ரன்) என அதிரடியாக விளையாடினர். இறுதியாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது.

இந்த மிகப் பெரிய இலக்கை எட்ட, லக்னோ அணி சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கியது. ராகுல் (40 ரன்) டி காக் (61 ரன்) நன்றாக ஆடி ரன் ரேட்டை 10 ரன்னுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இருந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு சென்னை அணிக்கு அதிகமாகத் தான் இருந்தது.

ஆனால் 19ஆவது ஓவரை வீச ஷிவம் துபேயை ரவீந்தர் ஜதேஜா அழைத்தார். அவர் வீசிய அந்த ஒரு ஓவர் ஆட்டத்தை தலைகீழாக்கியது. அவரது ஓவரின் முதலாவது பந்து பதோனியால் சிக்சருக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த இரண்டு பந்துகளையும் வைட் பாலாக வீசினார். கடைசி மூன்று பந்துகள் 4, 4, 6 எனப் பறந்தன. கடைசி ஓவரிலும் பதோனி ஒரு சிக்ஸ் அடித்தார். இப்படியாக 19.3 ஓவரில் 211 ரன் எடுத்து லக்னௌ அணி வெற்றி பெற்றது.

இன்று (1 ஏப்ரல் 2022) நடக்கவிருக்கும் ஆட்டத்தில் கொல்கொத்தாவும் பஞ்சாபும் விளையாடவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories