IND Vs WI T20: வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவின் அதிவேக அரை சதம்!

eng vs ind first odi - 2026

இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் மூன்றாவது டி20 போட்டி
சூர்யகுமார் யாதவின் அதிவேக அரை சதம்

– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நேற்று (02 ஆகஸ்டு,2022) பாசட்டரேவில் மீண்டும் ஒருமுறை இந்திய மே.இ. தீவுகள் அணிகளுக்கிடையேயான டி20 போட்டி நடைபெற்றது. இது இத்தொடரின் மூன்றாவது டி20 போட்டியாகும்.

மே.இ. தீவுகள் அணியை (20 ஓவர்களில் 164/5, கைல் மேயர்ஸ் 73, ரோவ்மன் போவெல் 23, புவனேஷ்குமார் 2/35) இந்திய அணி (19 ஓவரில் 165/3, சூர்யகுமார் யாதவ் 76, ரிஷப் பந்த் 33) வெற்றி பெற்றது.

பூவா தலையா வென்ற இந்திய அணி பந்துவீசத் தீர்மானித்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பவர் ப்ளேயில் அவர்கள் விக்கட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தனர். பிரண்டன் கிங் (20 பந்துகளில் 20 ரன்) 7.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் கைல் மேயர்ஸ் (50 பந்துகள், 73 ரன்) நல்ல ஸ்ட்ரைக்ரேட் வைத்திருந்தபோதும் கிங், நிக்கோலஸ் பூரன் இருவராலும் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை.

அஷ்வின், பாண்ட்யா இருவரும் நன்றாகப் பந்துவீசினர். இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஆவேஷ்கான் அதிகமாக அடி வாங்கினார். 20 ஓவர் முடிவில் மே.இ. தீவுகள் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தனர். ஆட்டம் தொடங்கும் முன்னரே ரோஹித் ஷர்மா எங்கள் அணி பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆடும் எனச் சொல்லியிருந்தார்.

அதேபோல ரோஹித் ஷர்மா ஐந்து பந்துகளில் ஒரு ஃபோர், ஒரு சிக்சருடன் 11 ரன் அடித்தார். ஆனால் காயம் காரணமாக அவர் இரண்டாவது ஓவர், நாலாவது பந்தில் வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் இந்தியா 56 ரன் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் 33 ரன் எடுத்திருந்தார்.

மற்றொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் ஆடிக்கொண்டிருந்தார். 12ஆவது ஓவரில் 27 பந்துகளில் 24 ரன் அடித்து ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 14.3 ஓவர்கள் வரை விளையாடி 44 பந்துகளில் 76 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் அரைச் சதம் அடித்தது இன்றைய சாதனை. அப்போது 30 பந்துகளில் 29 ரன் தேவைப்பட்டது. அதனைச் சுலபமாக பந்த் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நாலாவது போட்டி ஃப்லோரிடாவில் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. இடையில் மூன்று நாள்கள் இடைவெளி இருப்பதால் அதற்குள் ரோஹித் ஷர்மா காயத்திலிருந்து குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories